பாரா ஒலிம்பிக்ஸ் மேட்ச் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி இருந்து நடைபெற்று வருகின்றது. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இரு போட்டிகளும் டென்னிஸ் தான். முதல் போட்டி இன்று காலை 9 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்டது. அதில் இந்தியாவின் படேல் பாவினாபென் பிரிட்டிஷ் நாட்டின் ஸ்னாக்லெட் என்பவருக்கு எதிராக விளையாடினார். இந்த போட்டியில் இந்தியாவின் படேல் நன்றாக விளையாடி போட்டிகளில் வெற்றி அடைந்து நமது நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அதே போல் இன்னொரு போட்டி மாலை 5 மணி அளவில் துவங்கியது. அதில் கொரியா வீராங்கனை லீ மிலியு உடன் விளையாடினார், வீராங்கனை படேல் சோனால்பென். அதில் கொரியா நாடு வீராங்கனை 3-1 என்ற கணக்கில் வெற்றி அடைந்து விட்டார். நாளை முதல் போட்டியாக பெண்கள் ஒற்றையர் வில்வித்தை போட்டி 5:30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. அதில் இந்தியாவின் ஜோதி விளையாட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்கள் ஒற்றையர் நீச்சல் போட்டி 6:30 மணி வாக்கில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியாவின் ஜாதவ் நாராயணன் விலையாக இருக்கிறார். அடுத்த போட்டி ஆண்கள் ஒற்றையர் வில்வித்தை போட்டி நடைபெற இருக்கிறது. இதுல குமார் ராகேஷ் மற்றும் ஸ்வாமி ஷியாம் சுந்தர் பங்கேற்க இருக்கின்றனர். சிங் ஹர்விந்தர் மற்றும் விவேக் சிக்காரா இருவரும் 10.30 மணி அளவில் ஆண்கள் ஒற்றையர் வில்வித்தை போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்றனர். அடுத்ததாக, காலை 7:30 மணி அளவில் பெண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பாவினாபென் பிரேசில் நாட்டு வீராங்கனையான அலிவைரா என்பவருடன் விளையாட இருக்கிறது. கடைசியாக, ஆண்கள் ஷாட் புட் போட்டி 3:30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியாவின் தேக்சந்த் பங்கேற்று விளையாட இருக்கிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்