உங்கள் முகத்தை தங்கம் போல் ஜொலிக்க வைக்க வேண்டுமா?? பப்பாளி ஒன்றே போதும்!!

0

உங்கள் முகத்தை தங்கம் போல் ஜொலிக்க வைக்க வேண்டுமா? இதற்கு பப்பாளி ஒன்றே போதும். முகத்தில் உள்ள அழுக்குகள், கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை நீங்கும். முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பார்லர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அழகாக பராமரிக்க முடியும்.

முகம் பளபளக்க:

பப்பாளியை நன்றாக கூழாக்கி அதனுடன் சீனி கலந்து பயன்படுத்தலாம். முதலில் முகத்தை நன்றாக சோப் அல்லது பேஷ்வாஷ் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். பிறகு பப்பாளி பழத்தை தோல், விதைகளை நீக்கிவிட்டு கூழாக்கி முகத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

15 நிமிடம் மசாஜ் செய்த பிறகு சீனியை எடுத்து முகத்தில் ஸ்க்ரப் செய்யவும். இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும். மேலும், இறந்த செல்கள் நீங்கி முகம் பளபளப்பாக மாறும். வாரம் இரண்டு முறை செய்தாலே போதுமானது.

வறட்சி தன்மை நீங்க:

ஒரு சிலருக்கு முகம் வறட்சியாக இருக்கும். கண்ணத்தில் சிறு சிறு குழிகள், வடுக்கள் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் பப்பாளியை தேனுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். 3 பப்பாளி துண்டுகள், ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு 15 நிமிடம் போட வேண்டும்.

எந்தவொரு பேஷ்பேக் பயன்படுத்தும் பொழுதும் முகத்திற்கு அசைவு கொடுக்க கூடாது. முகத்தை அசைத்தால் முகத்தில் உள்ள தோள்கள் சுருங்கிவிடும். தேனுடன் கலந்து பப்பாளியை பயன்படுத்துவதால் முகம் மென்மையாக இருக்கும்.

முகம் வெள்ளையாக:

தக்காளி மற்றும் பப்பாளியை அரைத்து முகத்தில் தினமும் தடவி வந்தால் முகம் வெள்ளையாக மாறும். தக்காளியில் உள்ள அமிலம் முகத்தில் உள்ள அழுக்கை நீக்குகிறது. ஒரு சிலருக்கு முகத்தில் குழிகள் இருக்கும்.

ஒரே வாரத்தில் முடி உதிர்வை நிறுத்தி இழந்த முடியை திரும்ப பெற – சூப்பர் டிப்ஸ் இதோ!!

அவர்கள் தினமும் முகத்தில் தக்காளியை தேய்த்து வந்தால் ஒருவாரத்தில் குழிகள் மறந்துவிடும். பப்பாளி முகத்தை தங்கம் போல் ஜொலிக்க வைக்க பயன்படுகிறது. ஒருமுறை பப்பாளியை பயன்படுத்தினாலே தெரியும் முகத்தில் எண்ணற்ற மாற்றம் தெரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here