நடிகர் கமல் ஹாசன் நடித்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பாபநாசம். இந்த திரைப்படத்தின் இரெண்டாம் பாகம் வெளி வர வாய்ப்பே இல்லை என்று சினிமா துறை அறிஞர்கள் கூறுகின்றனர். அதற்காக காரணத்தையும் அவர்களே விளக்கியுள்ளனர்.
பாபநாசம் திரைப்படம்
தமிழ் ரசிகர்களுக்கு ஒரு திரில்லர் விருந்தாக அமைந்த திரைப்படம் தான், பாபநாசம். இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்கள் இது வரை பார்க்காத கதைக்களத்துடன் இருந்து வந்தது. அதிலும் குறிப்பாக, நடிகர் கமல் ஹாசனின் நடிப்பு வெகு அபாரமாக இருக்கும். இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் பல திரைப்படங்கள் திரில்லர் காட்சிகளுடன் வடிவமைக்கப்பட்டது. இந்த படத்தினை மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப்பே தமிழிலும் இயக்கினார்.
இந்த படத்தில் பல ட்விஸ்ட்கள் இருந்தாலும், கடைசி காட்சி தான் உச்சகட்ட ட்விஸ்ட். அந்த படத்தினை நன்றாக பார்த்தவர்களுக்கு தான் உண்மையினை போலீசாரிடம் கமல் சொல்லி இருப்பது தெரியும். இதனை கூர்ந்து கவனித்து இருந்தால் தெரிந்திருக்கும். இப்படியாக இருக்க இந்த படத்தின் ஒரிஜினலான திரிஷ்யம் படத்தின் இரண்டாவது பாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அமோசனில் வெளியானது. மலையாளத்தில் இந்த திரைப்படம் வெளியானதால் தமிழிலும் இந்த படத்தின் இரெண்டாவது பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
ஆனால், இரெண்டாவது பாகம் வெளிவராது என்று சினிமா துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். காரணம், திரிஷ்யம் 2 படத்தின் மொத்த கதை பாபநாசம் திரைப்படத்தின் கடைசி காட்சி தான். முதல் பாகத்திலேயே கமல் உண்மையினை போலீசாரிடம் கூறி விடுவார். ஆனால், திரிஷ்யம் 2 திரைப்படத்தில் தான் மோகன்லால் உண்மையினை போலீசாரிடம் கூறுவார். இது இப்படியாக இருப்பதால் பாபநாசம் 2 வெளிவர வாய்ப்பே இல்லை என்று கூறுகின்றனர். அப்படி இரெண்டாம் பாகம் எடுத்தாலும் அந்த திரைப்படத்தில் பல ட்விஸ்ட்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாமும் பொறுத்திருந்து பார்க்கலாம்..!!