பள்ளிகள் திறக்கும் தேதியை திடீரென தள்ளி வைப்பதாகவும், வழக்கமாக செயல்படும் நேரத்தை மாற்றி அமைப்பதாகவும் மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வெளியான அறிவிப்பு:
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று அதிரடியாக திறக்கப்பட்டுள்ளது. 8 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின் மாணவர்கள் இன்று பள்ளிக்கு திரும்புகின்றனர். இந்த நிலையில் வட மாநிலங்களில், மோசமான பனிப்பொழிவு நிலவி வருவதால், பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறையை வருகிற ஜனவரி 8ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இங்கு, கடந்த டிசம்பர் 25 முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை விடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
இதனைத் தொடர்ந்து லக்னோ மாவட்டத்தில், 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2:00 மணிக்கு முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் ஜனவரி 10ஆம் தேதி வரை இந்த நடைமுறை இருக்கும் என்றும், கடும் பனி பொழிவை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.