மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக மாநில தலைமைச் செயலாளர், தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை பஞ்சாப் அரசு நியமித்துள்ளது.
அரசு அதிரடி :
கடந்த 2004 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த, பங்களிப்பு பென்ஷன் என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வதாக ஜார்கண்ட், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் இமாச்சல் உள்ளிட்ட மாநில அரசுகள் சமீபத்தில் அறிவித்தது. கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி பஞ்சாப் அரசு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் மாநிலம் முழுவதும் உள்ள 1.75 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என நம்பிக்கை தெரிவித்து இருந்தது. ஆனால் இதற்கான பணிகள் இன்னும் தொடங்காததால், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னைவாசிகளே கவனம்., வரும் பிப் 1 ம் தேதி இந்த சுற்றுலா தளத்திற்கு செல்ல தடை.., வெளியான அறிவிப்பு!!
தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, மாநில தலைமைச் செயலாளர் விஜயகுமார் ஜான்ஜுவா தலைமையில் அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவை பஞ்சாப் அரசு நியமித்துள்ளது.இந்த திட்டம் ஆபத்தை ஏற்படுத்தும் என ரிசர்வ் வங்கி சமீபத்தில் எச்சரித்திருந்த நிலையில், இதனையும் மீறி பஞ்சாப் அரசு தற்போது குழுவை நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.