பாண்டியன் ஸ்டோர்ஸில் ஒன்றுகூடிய அண்ணன் தம்பிகள் – அப்போ இனி தாறுமாறு தான்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அண்ணன் தம்பிகள் மீண்டும் இணைந்துள்ளனர். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ஐஸ்வர்யா மற்றும் பிரஷாந்த் நிச்சயத்திற்கான அனைத்து வேலைகளும் நடந்து வருகிறது. மேலும் இதில் ஐஸ்வர்யாவிற்கு சுத்தமாக விருப்பமும் இல்லை. மேலும் தனது சித்தியிடம் கண்ணனை விரும்புவதாக சொல்கிறார்.

இதனை கேட்டு அத்திரமடையும் கஸ்தூரி ஐஸ்வர்யாவை அடி பின்னி எடுக்கிறார். மேலும் மக்களுக்கு ஐஸ்வர்யா கண்ணன் ஜோடி தான் பிடித்தும் உள்ளது. இப்பொழுது ஐஸ்வர்யாவிற்கு ஜோடி கண்ணனா?? அல்லது பிரஷாந்த்தா?? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. மேலும் பாக்கியலட்சுமி சீரியலுடன் இனியானது மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இணைந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பாக்யலக்ஷ்மி குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மீண்டும் வீடு திரும்பியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் மூர்த்தி, ஜீவா, கதிர் அனைவரும் இணைந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here