நீட் தேர்வு பற்றி ஆராய தமிழக அரசு அமைத்த குழு உச்ச நீதிமன்றத்திற்கு எதிரானவை இல்ல என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது, அதுமட்டுமில்லாமல் பாஜக கொடுத்த மனுவை விசாரித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
கரு.நாகராஜன் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்…
தமிழக அரசு நீட் தேர்வு குறித்து ஆராய ஒரு தனி குழுவை அமைத்துள்ளது. நீட் தேர்வை தமிழக்தில் ரத்து செய்ய வேண்டும் என்று திமுக ஆட்சி அதற்கான நடவடிக்கைகளை நடத்தி வருகிறது. அதற்காக நீட் தேர்வினால் உள்ள பாதிப்புகள் .ற்றும் நீட்டினால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆராய தமிழ்நாடு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்று புதிதாக அமைத்துள்ளது. இந்த குழுவின் செயல்களை எதிர்த்து பாஜக கட்சியின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்று செய்திருந்தார். அந்த மனுவில், நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம் நாடு முழுவதும் பொதுவானது மருத்துவக் கல்வியின் தரங்களை மேம்படுத்த 2019 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
அந்தச் சட்டத்தின் அடிப்படையில், மருத்துவ ஆலோசனைக் குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அதில் நீட் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இந்த குழு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல என்று தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்தது. அதுமட்டுமில்லாமல் நீட் தேர்வின் தாக்கம் பற்றி மக்கள் கருத்து கேட்பது குறித்து கேள்வி கேட்க நீங்கள் யார் என்று பாஜகவின் கரு.நாகராஜனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி ஒன்று கேட்டது. பின் நீட் தேர்வின் பற்றி ஆராய தமிழக அரசு அமைத்த குழுவுக்கு எதிராக கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்