வித்தியாசமான முறையில் பன்னீர் மசாலா ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
paneer
paneer

சைவ பிரியர்களின் விருப்பமாக உணவான பன்னீரை வைத்து வித்தியாசமான முறையில் கிரேவி எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்

பன்னீர் – 1 பாக்கெட்

தக்காளி – 1

பெரிய வெங்காயம் – 1

முந்திரி – 10 கி

மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

கரம் – மசாலா 1 தேக்கரண்டி

செய்முறை

முதலில் பன்னீரை வெதுவெதுப்பான நீரில் போட்டுக்கொள்ளவும். 10 நிமிடங்கள் கழித்து அதனை தனியாக எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். இப்பொழுது தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி பொறித்து எடுத்துக்கொள்ளவும்.

அந்த பன்னீரை தனியாக எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் முந்திரியை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதன் பின் தக்காளி வெங்காயத்தை நன்கு வறுத்து இவை அனைத்தையும் நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்பொழுது மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், பட்டை கிராம்பு சேர்த்து வதக்கி அதனுடன் அதனுடன் அரைத்து வைத்ததையும் சேர்த்து வதக்கவும். இப்பொழுது பச்சைவாடை நன்கு போனதும் மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். ஓரளவிக்ரு நீர் வற்றி வந்ததும் அதில் அதில் பன்னீரை சேர்த்து 5 நிமிடங்கள் கிளறிவிட்டு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான பன்னீர் மசாலா தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here