கதிரிடம் கர்ப்பமான விஷயத்தை சொன்ன முல்லை.., கண்கலங்க வைத்த பாசப்போராட்டம்!!!

0
கதிரிடம் கர்ப்பமான விஷயத்தை சொன்ன முல்லை.., கண்கலங்க வைத்த பாசப்போராட்டம்!!!
கதிரிடம் கர்ப்பமான விஷயத்தை சொன்ன முல்லை.., கண்கலங்க வைத்த பாசப்போராட்டம்!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கர்ப்பமாக இருக்காரா?? இல்லையா?? என ரசிகர்கள் அனைவரும் குழப்பத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் முல்லை தனியாக யாரிடமும் சொல்மல் ஹாஸ்பிடலுக்கு செல்கிறார். அங்கு டாக்டரிடம் தனக்கு இருக்கும் பிரச்சனையை சொல்கிறார். பின் டாக்டர் முல்லையை செக் செய்துவிட்டு நீங்க இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என சொல்ல முல்லை சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் விடுகிறார். இதை உடனே கதிரிடம் கூற வேண்டுமென்று டாக்டர் கூப்பிட கூப்பிட சென்று விடுகிறாள்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

முல்லை கதிரிடம் விஷயத்தை சொல்ல ஹோட்டல்க்கு செல்கிறாள். ஹோட்டலில் கதிரை பார்த்தவுடன் அழுகிறாள். பின் கதிரிடம் தனியே பேசவேண்டுமென்று கூப்பிட்டு செல்கிறாள்.கதிர் முல்லையிடம் “காலையில அழுதுட்டு இருந்த, இப்போ தனியா கூப்பிடுற உனக்கு என்னாச்சு? என்று கேட்கிறார். உடனே முல்லை ஹாஸ்பிடல் போய்ட்டுவந்தேன் என்று கூற நீ தனியாவா போன கூப்பிட்டா நா வந்துருப்பேன்ல என சொல்கிறார்.

குக் வித் கோமாளி ஷூட்டிங்கில் ஜிபி முத்து செய்த அலப்பறை.., அப்பறம் என்ன விஜய் டிவி டிஆர்பி எங்கேயோ போகப்போகுது!!

பின் முல்லை கதிரிடம் நான் நேற்று ப்ரெக்னென்சி கிட்டில் செக் பண்ணி பார்த்தேன். அப்போது இரண்டு கோடு வந்தது. ஆனாலும் என்னால் நம்ப முடியவில்லை. பிறகு இன்னைக்கு செக் பண்ணேன். அப்பையும் இரண்டு கோடு வந்துச்சு. அதுனால தான் இப்போ ஹாஸ்பிடல் போய்ட்டுவந்தேன். இந்த செக்கப்ல இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என சொல்கிறார். இதை கேட்டதும் கதிர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அழுகிறார் .பின்னர் முல்லையிடம் உன்மையாகவா என்று கேட்க முல்லை ஆமாம் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here