தனது தோழியின் முன்பு கதிரால் அசிங்கப்படும் முல்லை – சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைகளம்!!

0

வீட்டில் அனைவரும் கதிருக்கு ஒன்றுமே தெரியாது என கூறி சிரிக்க கதிர் மீது கோபப்படுகிறார் முல்லை. பிறகு கண்ணனையும் ஐஸ்வர்யா இருவரையும் ஒன்றாக பார்த்த முருகன் கதிரிடம் வந்து கூறுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜனார்த்தனன் கடைக்கு ஜீவா போவது பிடிக்கவில்லை என லட்சுமி கூற இந்த வீட்ல தான் மாமியார் மருமகள் சண்டை இல்லாம இருந்துச்சு, இப்போ அதையும் ஆரம்பிச்சுடுங்க என கண்ணன் கூறுகிறார். அப்போது ஜீவாவுக்கு பேங்கில் வேல இருக்கு என மூர்த்தி கூற, பேங்குக்கு போணுமா என கதிர் கேட்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்போது இதையெல்லாம் தெரிஞ்சு நீ என்ன பண்ண போற, முதலாளின்னா எல்லா வேலையும் தெரிஞ்சிருக்கணும் உனக்கு கடையை மட்டும் தானே பாத்துக்க தெரியும் என கண்ணன் கூற நான் தொழிலாளி தான் என கதிர் கூறுகிறார். இதை கேட்ட முல்லை கோபித்துக்கொண்டு உள்ளே செல்கிறார்.

ரூமுக்குள்ளே வரும் கதிரிடம் உங்களை பாத்து எல்லாரும் சிரிக்கிறாங்க என முல்லை கூற என்ன நெனச்சா உனக்கு அவமானமா இருக்குல்ல என கதிர் கூறுகிறார். எல்லாரும் உங்களை பாத்து சிரிச்சா எனக்கு தான் கஷ்டமா இருக்கு என கதிரிடம் புலம்புகிறார் முல்லை. அப்போது மூர்த்தி கதிரை கூப்பிட, இப்போ என்ன நான் பேங்க்குக்கு போகணும் அவ்வளவு தானே.

இந்தியாவில் ஒரே நாளில் 59,118 பேருக்கு கொரோனா – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

நீ கத்துக்குடு நா செய்றேன் என கூறிவிட்டு கிளம்புகிறார் கதிர். பிறகு ஐஸ்வர்யாவை காலேஜுக்கு பைக்கில் கூட்டி செல்கிறார் கண்ணன். இருவரும் கடையில் நின்று இளநீர் குடிப்பதை முல்லையின் அப்பா முருகன் பார்த்து விடுகிறார். பிறகு கடைக்கு போன் செய்யும் ஜனார்த்தனனிடம் ஜீவாவுக்கு வேலை இருக்கு என கூறி விட்டு போனை வைக்கிறார் குமரேசன்.

அப்போது நான் வேணும்னா பேங்க் போயிட்டு வரேன் என கதிர் கேட்க கதிருக்கு என்ன தெரியும் அவன் பட்டிக்காட்டான் என குமரேசன் கதிரை கிண்டல் செய்கிறார். பிறகு கதிரை சந்திக்கும் முருகன், கண்ணனுடன் ஐஸ்வர்யாவை பார்த்ததை கூறுகிறார்.

கண்ணனை கொஞ்சம் பாத்துக்கோங்க என முருகன் கதிரிடம் கூறுகிறார். வீட்டில் கஸ்தூரியும் தனத்தின் அம்மாவும் தனத்தை பார்க்க வருகிறார்கள். பிறகு கோவிலுக்கு செல்லும் கதிரும் முல்லையும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

முல்லையின் அப்பா முருகனை பார்ததாக சொல்லும் கதிர், முல்லையை ஐஸ்வர்யாவிடம் அடிக்கடி பேச சொல்லி கூறுகிறார். அப்போது அங்கு வரும் முல்லையின் தோழி அவரது கவணனை பற்றி பெருமையாக கூறுகிறார். முல்லையின் முகம் லேசாக மாறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here