ஜீவா ஜனார்தனனின் சூப்பர் மார்க்கெட்டில் இருப்பதை பார்த்து கோவமடையும் குடும்பம் – சூடுபிடிக்கும் கதைகளம்!!

0

முல்லை மீது ஏற்பட்ட பழியை போக்குவதற்காக குமரேசனிடம் பணத்தை கடன் வாங்குகிறார் கதிர். ஜீவா, ஜனார்த்தனன் கடைக்கு சென்று வீட்டிற்கு வராததால் வீட்டில் அனைவரும் கோபத்தில் உள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடில் கல்லூரிக்கு வரும் கண்ணன் பணத்தை திருடிய சோகத்தில் உள்ளார். அங்கு வரும் கண்ணனின் நண்பர்கள், உங்கிட்ட ஒரு பிஸ்கட் பாக்கெட் கேட்டா கூட எடுத்து தர மாட்ட, ஐஸுக்காக வீட்டிலிருந்து பணத்தை திருடியிருக்க, என்ன அவளை லவ் பண்றியா என கண்ணனை கலாய்க்கின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்போது அங்கு வரும் ஐஸ்வர்யா கண்ணனுக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்து வந்ததாக சொல்ல, இருவரும் சேர்ந்து சாப்பிடுகிறார்கள். பிறகு வீட்டிற்கு வரும் கதிரிடம் கடையை பற்றி விசாரிக்கிறார் தனம். முல்லை இன்னமும் அழுது கொண்டிருக்கிறாள் நீ அவளை போய் பாரு என கதிரை அனுப்பிவிடுகிறார் தனம்.

சமயலறையில் கதிரை பார்த்த முல்லை, பணம் காணாமல் போனதுக்கு வீட்ல யாரும் ஏதும் சொல்லல, ஆனால் என்னை தப்பா நெனைப்பாங்கள்ல என கூறிவிட்டு அழுகிறார். பணம் கண்டிப்பாக கிடைக்கும் என அவரை சமாதானப்படுத்துகிறார் கதிர். பின்பு கடையிலிருக்கும் குமரேசனிடம், உங்ககிட்ட பணம் இருக்கா மாமா, ஒரு பதினைந்தாயிரம் வேணும் என கேட்கிறார் கதிர்.

இந்த வயசுல இந்த ரீல்ஸ் எல்லாம் தேவையா?? வனிதாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

எதுக்கு உனக்கு இவ்வளோ பணம் என குமரேசன் கேட்க, கதிர் வீட்டில் நடந்தவற்றை கூறுகிறார். வீட்டிற்கு வா பணத்தை தரேன் என குமரேசன் கூறுகிறார். பிறகு ஜனார்த்தனன் கடைக்கு வந்ததும், கல்லா சாவியை ஜனார்தனனிடம் கொடுக்கிறார் ஜீவா. இனிமே என்ன கடைக்கு கூப்பிடாதீங்க என கோவப்படுகிறார் ஜீவா.

அந்த கடையில என்ன வியாபாரம் நடக்குது என கடையிலிருப்பவர் கூற, கடுப்பாகி அங்கிருந்து கிளம்புகிறார் ஜீவா. இரவு மூர்த்தி வீட்டுக்கு வந்ததும் ஜீவா எங்கே என கேட்கிறார் லட்சுமி. ஜீவா ஜனார்த்தனன் கடைக்கு சென்றதை மூர்த்தி சொல்ல லட்சுமி கோபமடைகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here