பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு.., வீட்டை விட்டு வெளியேறும் கண்ணன்-ஐஸ்வர்யா??

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு.., வீட்டை விட்டு வெளியேறும் கண்ணன்-ஐஸ்வர்யா??
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு.., வீட்டை விட்டு வெளியேறும் கண்ணன்-ஐஸ்வர்யா??

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா வீட்டை விட்டு வெளியே போன நிலையில் கண்ணன்- ஐஸ்வர்யா இருவரும் வீட்டை விட்டு வெளியேறுவதாக ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இத்தன நாள் அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இப்போது விரிசல் விழுந்து விட்டது. ஒரு பக்கம் ஜனார்த்தனன் தான் நினைத்தது நடந்து விட்டது என்ற சந்தோஷத்தில் இருக்கிறார். இன்னொரு பக்கம் ஜீவா பேசியதை நினைத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி சீரியல் பல பரபரப்பான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் இப்போது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஜீவா வீட்டை விட்டு வெளியே போனதுக்கு நீதான் காரணம் என்று தனம் கண்ணனை சத்தம் போடுகிறார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஐஸ்வர்யா போதும் நிறுத்துங்கள் என தனத்திடம் மல்லு கட்ட முல்லை கண்ணன்-ஐஸ்வர்யாவிடம் நீங்க மட்டும் என்ன பெரிய ஒழுங்கா.

இரண்டாவது திருமணம் சர்ச்சை விவகாரம்.., எனக்கு அதுதான் ரொம்ப முக்கியம்.., உண்மையை உடைத்த நடிகை மீனா!!

உண்மையான சம்பளம் 40, 000 மறைச்சு வீட்ல 17,000 தானே கொடுக்குறீங்க என உண்மையை உடைக்கிறார். இதை கேட்ட மூர்த்தி எதுவும் பேசாமல் இருக்க ஐஸ்வர்யா எல்லா சம்பளத்தையும் உன்கிட்ட கொடுத்துட்டு நாங்க கைகட்டி நிக்கணுமா. உங்களுக்காக நிறைய கஷ்டப்பட்டு, அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிட்டோம். இனி எங்களால் அப்படி இருக்க முடியாது என சண்டை போடுகிறார்.

இதை கேட்ட மூர்த்தி அப்படி கஷ்டப்பட்டு யாரும் இங்கே இருக்க வேண்டாம். வீட்டை விட்டு கிளம்புங்க என்கிறார். இதை வைத்து பார்க்கும் போது அடுத்து வரும் எபிசோடுகளில் இத்தனை நாள் ஊரில் உள்ளோர் பொறாமை படும் அளவுக்கு ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிகள் இப்போது பிரிந்து விட்டனர். இவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்களா?? இல்லையா?? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here