கோவிலில் மல்லியை விதவையாக பார்க்கும் தனம் – பல ட்விஸ்டுகளுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதுவரவாக மல்லி மீண்டும் வரவுள்ளார். இதன் மூலமாக சீரியலில் பல ட்விஸ்டுகள் காத்துக்கொண்டுள்ளது. இதனால் பலரும் இன்றைய எபிசோடுக்காக காத்துக்கொண்டுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது விறுவிறுப்பான பல சம்பவங்கள் நடந்து வருகிறது. கண்ணனும் ஐஸ்வர்யாவும் பேசிக்கொள்வது தனத்திற்கு பிடிக்கவே இல்லை. மேலும் தனத்திற்கு சந்தேகம் எல்லாம் ஐஸ்வர்யா மேல் தான். ஆனால் மீனா கண்ணன் ஐஸ்வர்யாவை விரும்புவதை கண்டுபிடித்து விட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் புது தொழில் தொடங்க அனைவரும் யோசித்து கொண்டுள்ளனர். இப்படி இருக்க இன்றைய எபிசோடில் தனம் கோவிலுக்கு செல்ல எதிர்பாராத விதமாக மல்லியை சந்திக்கிறார். மல்லி தற்போது பல வசதிகளுடன் வாழ்ந்து கொண்டுள்ளார்.

தனம் வீட்டில் முல்லைக்கு கல்யாணம் ஆன விஷயத்தை எல்லாம் சொல்கிறார். ஆனால் எதையும் கேட்கும் மனநிலையில் மல்லி இல்லை. அடுத்ததாக மல்லி பற்றி கேட்கிறார் தனம். அவர்களுக்கு குழந்தையும் இல்லை, அதே நேரம் கணவர் இறந்து மூன்று வருடங்கள் ஆகிறது என்றும் சொல்கிறார். இதனால் தனத்திற்கு ஷாக்காகிறது.

ஏன் வீட்டிற்கு வரலை என்று கேட்க யாரும் என்ன ஏத்துக்க மாட்டாங்க, என் கணவரோட பையன் நானும் தான் இருக்கோம் என்று சொல்கிறார். அடுத்ததாக தனத்தை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு செல்கிறார் மல்லி. இன்னும் பல ட்விஸ்டுகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here