பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மொத்த குடும்பமும் இப்பொழுது வீட்டை விட்டே வெளியேறி கதிரின் வீட்டில் தங்கியுள்ளனர். ஆரம்பத்தில் மீனா மற்றும் ஐஸ்வர்யா இடையே ரூமுக்காக சண்டை வந்து கொண்டே இருந்தது. ஆனால் இப்பொழுது ஓரளவுக்கு சண்டைகள் எல்லாமே ஓய்ந்து விட்டது. மேலும் ஜனார்த்தனன் எப்படி இந்த குடும்பத்தை பிரிப்பது என்று யோசித்து கொண்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மீனாவின் மனதை மாற்ற எவ்வளவோ முயற்சி செய்கிறார். ஆனால் தன் குடும்பத்தை விட்டு கொடுக்கவே இல்லை மீனா. இப்படி இருக்க இப்பொழுது ஜனார்த்தனன் எப்படியாவது மீனா வீட்டோடு அழைத்து செல்ல பல திட்டங்களை போடுவாராம். அதாவது மீனாவை தனியாக சந்தித்து அவரிடம் குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றி தவறாக சொல்லுவாராம்.
இப்போ தான் Divorce ஆச்சு.., அப்பறம் தோல் நோய்.., இதுல இப்படி ஒரு நிலைமையில சிக்கிடீங்களே சம்மு!!
மேலும் ஐஸ்வர்யா உன்னை பற்றி எல்லார்கிட்டயும் தப்பா பேசிகிட்டு இருக்கா என்று சொல்லுவாராம். ஏற்கனவே ஐஸ்வர்யா மீது கோவத்தில் இருக்கும் மீனா இதை நம்பிவிட இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஆரம்பிக்குமாம். மேலும் மூர்த்திக்கும் இதனால் உடல்நலம் சரியில்லாமல் போகுமாம். இதனால் கோவமடையும் ஜீவா மீனாவை வீட்டை விட்டு அனுப்பி விடுவாராம்.