பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் எக்குத்தப்பாக கடனில் சிக்கி இப்பொழுது முழித்து கொண்டுள்ளார். கடனை கேட்டு வீட்டில் வந்து பிரச்சனை செய்கின்றனர். அதுமட்டுமில்லாமல், ஐஸ்வர்யாவிடம் தவறாக வேறு நடந்து கொள்ள முயற்சிக்கின்றனர். இதனை கேள்விப்பட்ட கதிர் அவர்களை அடித்து விட போலீஸ் கேஸாகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
கதிரை போலீஸ் அரெஸ்ட் செய்து அழைத்து செல்ல தனம், முல்லை கதறி அழுகின்றனர். இப்படி சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் தான் இப்பொழுது புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது ஐஸ்வர்யா இத்தனை நாளாக கண்ணனை மூர்த்தி குடும்பத்துடன் சேர விடாதபடி வைத்திருந்தார். கண்ணன் இந்த நிலைமைக்கு ஆளானதற்கு காரணமே, ஐஸ்வர்யா தான்.
ஹன்சிகாவை அந்த விஷயத்தில் டார்ச்சர் செய்த பிரபல நடிகர்.., வெளிவந்த உண்மை சம்பவம்!!
இப்பொழுது கதிர் தனக்காக சண்டை போட போய் தான் ஜெயிலில் இருக்கிறார் என்ற விஷயம் தெரிய வரும் போது, ஐஸ்வர்யா அதிர்ச்சியாவாராம். அதுமட்டுமின்றி முல்லைக்கு ஏற்கனவே ஐஸ்வர்யாவை பிடிக்காது. இப்பொழுது இந்த சம்பவம் வேறு நடந்து விட்டதால், கண்டிப்பாக முல்லை ஐஸ்வர்யாவை திட்டி தீர்க்கப்போவது உறுதி. அதாவது முல்லை ஐஸ்வர்யா, கண்ணன் வீட்டிற்கு வந்து அசிங்கப்படுத்துவாராம். உங்களால தான் எல்லா பிரச்சனையும். என் புருஷன் இப்போ ஜெயிலில் இருக்காரு.., நீங்க எல்லாம் மனுஷங்களா என்று திட்டுவாராம். இனிமேலாவது ஐஸ்வர்யா திருந்துவாரா?? மாட்டாரா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.