தனம், மூர்த்தியின் மீது சந்தேகப்படும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இன்றைய எபிசோடு!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவை பார்க்க சென்ற மூர்த்தியை, ஜனார்த்தனன் கேவலமாக பேசியதை அடுத்து தான் கர்ப்பமான விஷயத்தை மூர்த்தியிடம் கூறுகிறார் தனம். இதனால் தலை, கால் புரியாமல் இருக்கும் தனம், மூர்த்தியை பார்த்து வீட்டில் உள்ள அனைவர்க்கும் குழப்பமாக உள்ளது. மேலும் கர்ப்பமான விஷயத்தை வீட்டில் சொல்லாமலும் மறைக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்திற்கு டெஸ்ட் எடுத்து கர்ப்பமானது தெரிந்ததும் வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர். வீட்டில் உள்ளவர்களிடம் இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம் என முடிவு செய்கின்றனர். தனம் எப்படி வீட்டில் இருப்பவர்களிடம் கர்ப்பத்தை பற்றி சொல்ல போகிறோம் என்று வெட்கப்படுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மூர்த்தி தனத்தை கையை பிடித்துக்கொண்டு வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அடுத்ததாக அவர்கள் வீட்டிற்கு வர தனம் வேலை இருப்பதாக உள்ளே செல்ல போக அதெல்லாம் பண்ண கூடாது என்று உட்கார வைக்கிறார். மேலும் உன்னை பார்த்துக்கொள்வது தான் என் வேலை என்றும் கூறுகிறார்.

முல்லைக்கு ஒன்றுமே புரியவில்லை. மூர்த்தி முல்லையிடம் தனத்தை நன்றாக பார்த்துக்கொள்ளும் படி கூறுகிறார். மீனா வீட்டிற்கு போனதை பற்றி கேட்க அதை பற்றி எதுவுமே சொல்லவும் இல்லை. அடுத்ததாக கதிர் வீட்டிற்கு வர கண்ணன் நடந்தவற்றை கூறுகிறார்.

டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க ஹேமாவின் முடியை எடுக்கும் வெண்பா!!

மேலும் கதிர் கண்ணனை கடைக்கு அழைக்க அவர் மறைகிறார். அடுத்ததாக தனம் வர ஹாஸ்பிடலுக்கு போனதை பற்றி சொல்கிறார். கதிர் மற்றும் கண்ணனிடம் எப்பொழுதும் இதே போல அன்பு மாறாமல் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

அடுத்ததாக முல்லை தனத்தின் சந்தோசத்திற்கு காரணம் என்ன என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது மீனா முல்லைக்கு போன் செய்து தனம் பேசியதை மட்டும் சொல்கிறார்.

முல்லைக்கே இது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. அப்போ தனத்தின் சந்தோசத்திற்கு என்ன காரணம் என்று யோசிக்கிறார் முல்லை. அடுத்ததாக தனத்திற்கும் வீட்டில் உள்ளவர்களும் ஸ்வீட் வாங்கி வருகிறார் மூர்த்தி. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here