பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கர்ப்பமாக இருக்கும் தனம் அதை பற்றி குடும்பத்தினரிடம் சொல்வாரா?? மாட்டாரா?? என பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதை தனம் தனது கணவர் மூர்த்தியிடம் சொல்லப் போகும் போது அவர் கோபத்தில் எழுந்து செல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது தொடர்ந்து பல சண்டைகள் உருவாகி வருகிறது. மீனாவிற்கு குழந்தை பிறந்ததில் இருந்தே குழந்தையை வைத்து பல பிரச்சனைகள் ஏற்பட்டது. மீனா ஒரு பாத்ரூமுக்காக பல ஆர்ப்பாட்டங்களை செய்து வந்தார். இந்நிலையில் தனம் வேறு கர்ப்பமாக இருக்கிறோமா?? இல்லையா?? என்ற குழப்பத்திலேயே இருந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
எப்படியோ கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்து கோவிலுக்கு சென்று வந்தார். அதற்குள் மீனா பல பிரச்சனைகளை இழுத்து விட்டார். ஜனார்த்தனன் மீனாவும் சண்டை போட்டு வீட்டை விட்டே வெளியேறினர்.
ஜீவா எவ்வளவு சொல்லியும் மீனா கேட்பதாக இல்லை. மீனா வீட்டை விட்டு வெளியேறியதும் எதையோ பறிகொடுத்தது போலவே உள்ளார் ஜீவா. குழந்தையின் விளையாட்டு பொம்மையெல்லாம் பார்த்து கதறி அழுதார்.
தனது காதலை ஒன்று விடாமல் கூறும் வெண்பா – தாலி கட்டுவாரா பாரதி??
மேலும் வாசலில் ஏதோ இழந்ததை போல அமர்ந்திருக்கும் ஜீவாவிடம் கதிர் வந்து ஆறுதல் கூறுகிறார். ஜீவா குழந்தை முடியாமல் இருந்ததையும் தான் வேலை விஷயத்தில் பிசியாக இருந்ததால் கவனிக்க முடியாமல் போனதையும் நினைத்து வருத்தப்படுகிறார். கதிர் எவ்வளவு சமாதானம் செய்தும் ப்ரோஜனம் இல்லை.
உள்ளே வரும் கதிரிடம் தனம் என்ன என்று கேட்க ஜீவாவின் வருத்தத்தை பற்றி கூறுகிறார். அடுத்து தூங்க போகலாம் என்று இருக்க தனம் தன் கணவர் வரும் வரை காத்திருப்பதாக கூறுகிறார். அவர் வர நேரம் ஆகும் என்று கூற தனம் கேட்பதாக இல்லை. அடுத்ததாக தனம் கர்ப்ப விஷயத்தை கணவரிடம் சொல்ல வேண்டும் என்று ஆசையுடன் அமர்ந்திருக்கிறார்.
நீண்ட நேரத்திற்கு பிறகு மூர்த்தி வர தனம் சந்தோஷமடைகிறார். மூர்த்தி தனத்திடம் இவ்வளவு நேரம் எதற்கு முழிச்சு இருக்க என்று கேட்க வெக்கப்படுகிறார். தனம் டெஸ்ட் கார்டை காட்ட வரும் நேரத்தில் மூர்த்தி குழந்தையும் மீனாவும் எங்கே என்று கேட்க நடந்தவற்றை கண்ணன் கூறுகிறார்.
இதனால் கோவமடையும் மூர்த்தி கடையிலும் நிம்மதி இல்லை, வீட்டுலையும் நிம்மதி இல்லை என்று கூறி கோவமடைந்து செல்கிறார். தனம் சொல்ல வருவதை கேட்பதாகவும் இல்லை. தனம் ஆசையாக சொல்ல வந்து மூர்த்தி எதையும் கேட்காததால் வருத்தமடைந்து அப்படியே அமர்கிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.