பார்வதி வீட்டில் இருந்து கண்ணன் ஐஸ்வர்யாவை துரத்தி விடும் மல்லி – அடைக்கலம் தரும் மீனா!!

0

விஜய் டிவியில் பல திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பார்வதி வீட்டில் இருந்து கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு துரத்தி விடுகிறார் மல்லி. இதனை அறிந்த மீனா, அவர்களுக்கு தனது அப்பா மூலம் அடைக்கலம் தர முடிவு செய்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ளும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை முல்லை கேட்டுக்கொண்டதன் பேரில் முருகன் தனது வீட்டில் தங்க வைக்கிறார். இதனால் முல்லை, தனம், மீனா ஆகியோர் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் அவர்கள் அங்கு  தங்கி இருப்பதை அறிந்த மல்லி, கஸ்தூரி மற்றும் பிரசாந்த் ஆகிய மூவரும் பார்வதி வீட்டிற்கு வருகின்றனர்.

இதையடுத்து கஸ்தூரி, பார்வதி மற்றும் முருகனிடம் கோபமாக பேசி ரூமிற்குள்  இருக்கும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை அடித்து வெளியே அழைத்து வருகிறார். அந்த பின்னர் மல்லி பார்வதியிடம், நான் இனி உங்க கிட்ட பேசணுன்னு நினைச்சா அவர்களை வீட்டை விட்டு அனுப்புமாறு சொல்கிறார். இந்நிலையில் பிரசாந்த் கண்ணணை அடிக்க கை ஓங்க, முருகன் உள்ளிட்ட அனைவரும் அவரை தடுக்கின்றனர்.

அதன் பின்னர் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்புகின்றனர். இதையடுத்து, தன் அம்மா வீட்டில் நடந்த கலவரம் அறிந்த முல்லை, நடந்த விஷயத்தை தனம் மற்றும் மீனாவிடம் கூறுகிறார்.

அதன் பிறகு தனது அப்பா ஜனார்த்தனனை சந்திக்கும் மீனா, கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு தங்க ஒரு இடம் தயார் செய்யுமாறு கேட்கிறார். மேலும் இவர்கள் இருவரும் இங்கு தான் தங்க உள்ளனர் என்பது யாருக்கும் தெரிய வேண்டாம் எனவும் கூறுகிறார். அதற்கு ஜனார்த்தனன் யோசித்தபடி உள்ளார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here