பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் பேங்க் ஆபீசர்கள் கேஸை வாபஸ் செய்வதற்கு 5 லட்சம் பணம் கேட்கின்றனர். இதை கேட்டு மூர்த்தி அதிர்ச்சியடைய ஜீவா பணம் கட்டுவதாக வாக்குறுதி கொடுக்கிறார். அடுத்ததாக கண்ணனை நினைத்து மூர்த்தி ஆத்திரமடைகிறார். பின் அவரை சமாதானப்படுத்தும் ஜீவா கதிரை வெளியே எப்படியாவது எடுக்க வேண்டும் சொல்கிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால் மூர்த்தி, ஜனா, ஜீவா பணத்தை ரெடி பண்ணுவதற்கான முயற்சியை செய்கின்றனர். மூர்த்தி எங்கு கேட்டும் பணம் கிடைக்காததால் செய்வதறியாமல் முழிக்கிறார். இந்த பக்கம் ஜீவா வீட்டுக்கு வந்து தனம் முல்லையிடம் விஷயத்தை சொல்ல பார்வதி கொந்தளிக்கிறார். முல்லை கதிர் வரமாட்டாரா என கதற அவரை ஜீவா சமாதானப்படுத்துகிறார்.
பின் ஜீவா, மீனா வீட்டுக்கு கிளம்ப தனம், முல்லை அழுது கொண்டிருக்கின்றனர். இந்த பக்கம் ஜீவா தனக்கு தெரிஞ்ச எல்லோரிடமும் பணம் கேட்க அனைவரும் கையை விரிக்கின்றனர். மீனா ஜீவா கஷ்டப்படுவதை பார்த்து அப்பாவிடம் கேள் என்று சொல்ல அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கிறார். பின் மீனாவின் அம்மா ஜனார்த்தனன் இடம் வாங்கி தரவா என்று சொல்ல ஜீவா வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.