பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் தூக்கம் வராமல் மூர்த்தி தவித்துக் கொண்டிருக்க தனம் என்ன ஆச்சு என்று கேட்க, அதுக்கு மூர்த்தி கண்ணனை யாரோ அடிக்க வந்ததாக கனவு வந்துச்சு என்று சொல்கிறார். பின் இருவரும் கண்னனின் நிலைமையை நினைத்து வருத்தப்பட்டு அப்படியே தூங்கி விடுகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தூங்கும் போது தனத்துக்கு நெஞ்சுவலி வர மூர்த்தி என்ன ஆச்சு என்று கேட்ட ஒன்னுமில்லை என்று சொன்னவுடன் தூங்குகின்றனர். இந்த பக்கம் கண்ணன் ஐஸ்வர்யா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் வங்கி அதிகாரிகள் அங்கு வர பணம் கட்டாததுக்கு சத்தம் போடுகின்றன. அவர்களிடம் கண்ணன் பணம் கட்டுவதற்கு டைம் கேட்கிறார். பின் இதை நினைத்து கண்ணன் வருத்தப் பட்டுக் கொண்டிருக்க அப்போது வீட்டுக்கு தனம் வருகிறார்.
போதும்.., நிறுத்து.., ராதிகாவுக்கு நோஸ்கட் கொடுத்த கோபி.., நக்கலாக சிரிக்கும் இனியா!!!
அவர்களிடம் தனம் பணத்துக்கு என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்க இருவரும் நாங்கள் சமாளிப்போம் என்று சொல்கின்றனர். பதிலுக்கு தனம் விளையாட்டா எதுவும் நினைக்காதீங்க என்று சொல்ல ஐஸ்வர்யா அதுக்கும் நக்கலாக பேசிவிட்டு டீ போடுகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். அடுத்ததாக கஸ்தூரி வர ஐஸ்வர்யாவிடம் கடன் வாங்கிய பணத்தை கொடுத்துவிட்டு கரெக்டா வட்டி கொடுத்துவிட வேண்டும் என்று சொல்கிறார். இதை கேட்டு இருவரும் ஷாக்காக இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
—