பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் கதிரிடம் பணம் கேட்க சொல்லி கண்ணனை தூண்டிவிடுகிறார். இதுக்கு முதலில் சம்மதிக்க மறுக்கும் கண்ணன் பின் பணம் கேட்க ஒத்துக்கொள்கிறார். இந்த பக்கம் ஜீவா, மீனா அனைவரும் கயலை ஸ்கூலுக்கு அழைத்துச் செல்கின்றனர். அந்த நேரம் ஜனார்த்தனன் அங்கு வர கயல் ஸ்கூலுக்கு போகாமல் அடம் பிடிப்பதை பார்த்து அனுப்ப வேண்டாம் என்று சொல்கிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனா ஜீவா ஸ்கூலுக்கு அனுப்புவேன் என்று சொல்ல இருவருக்கும் இடையில் விவாதம் நடக்கிறது. இது மட்டும் இல்லாமல் ஜீவா சொல்லும் எந்த விஷயத்துக்கும் ஒத்துக்கொள்ளாமல் அசிங்கப்படுத்துகிறார். இதனால் மீனா கடுப்பாகி தன் அப்பாவிடம் சண்டை போடுகிறார். இந்த பக்கம் தனம் வீட்டுக்கு வரும் மீனா குழந்தைகளை கொஞ்சி கொண்டிருக்கின்றனர்.
அப்போது மீனா வீட்டுக்கு வந்ததை நினைத்து தனம் சந்தோஷப்பட அந்த நேரத்தில் மூர்த்தி வருகிறார். கயலை பார்த்த கொண்டாட்டத்தில் அவளை தூக்கி கொஞ்சுகிறார். பின் எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அடுத்ததாக மூர்த்தி கடைக்கு கிளம்ப தனம், மீனா ஜீவாவை பற்றி பேசுகின்றனர். இந்த பக்கம் கண்ணன் ஆபீஸ்க்கு கிளம்பு அப்போது சிலர் அவரை பணம் கட்ட சொல்லி சத்தம் போடுகின்றன. இதை கேட்டு கண்ணன், ஐஸ்வர்யாவும் வருத்தப்படுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.