பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் மூர்த்தியிடம் கண்ணன் வீட்டுக்கு வந்த விஷயத்தை எப்படி சொல்வதென்று தெரியாமல் பயப்படுகிறார். மூர்த்தியிடம் கண்ணன் பற்றி தனம் பேச அவர் கோபப்படுகிறார். தனம் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்க மூர்த்தி தனத்திடம் நீ எதையோ மறைக்கிற சொல்ல வந்ததை முழுசா சொல்ல மாட்ற என்று சொல்ல தனம் கண்ணனை கூட்டிட்டு வருகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
கண்ணனை பார்த்த மூர்த்தி ஆத்திரத்தில் எல்லா பிரச்சனையும் இவனால தான். இவன வெளியே போக சொல்லு என கோபப்படுகிறார். கண்ணன் அங்கிருந்து சென்று ஐஸ்வர்யாவிடம் அழுது கொண்டே இருக்க ஐஸ்வர்யாவும் நம்ம வீட்டுக்கு போயிடலாமா என்கிறார். இந்த பக்கம் தனம் மூர்த்தியிடம் கதிர் தான் இவங்கள இங்க கூட்டிட்டு வந்தாங்க.
இனி கண்ணன்-ஐஸ்வர்யா இங்க தான் இருப்பாங்க என்று சொல்ல மூர்த்தி கோபப்படுகிறார். அதன் பிறகு தனம் மூர்த்தியிடம் முதல் தடவையா கதிர் உங்ககிட்ட கேட்காம முடிவெடுத்து இருக்கிறான். தம்பிக்காக அவன் தான் எல்லா கஷ்டத்தையும் தாங்கி இருக்கான். இது அவன் எடுத்த முடிவு என்று சொல்ல மூர்த்தி யோசித்தபடி நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.