உன்ன நா தான வளர்த்தேன்.., நீ மட்டும் ஏன் இப்படி இருக்க.., கண்ணனை கிழித்து தொங்கவிடும் மூர்த்தி!!!

0
உன்ன நா தான வளர்த்தேன்.., நீ மட்டும் ஏன் இப்படி இருக்க.., கண்ணனை கிழித்து தொங்கவிடும் மூர்த்தி!!!
உன்ன நா தான வளர்த்தேன்.., நீ மட்டும் ஏன் இப்படி இருக்க.., கண்ணனை கிழித்து தொங்கவிடும் மூர்த்தி!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் தனம், முல்லை புலம்பி கொண்டிருக்க மூர்த்தி பணம் பாதி தான் கிடைத்திருக்கு என்று சொல்ல வீட்டில் உள்ள அனைத்து நகைகளையும் எடுத்து வைத்து பணத்தை கட்டச் சொல்கிறார் தனம். அந்த பணத்தை மூர்த்தி எடுத்துக்கொண்டு பேங்க் ஆபிசரிடம் பேச அவர்கள் பணத்தை இப்ப கொடுங்க நாளைக்கு காலையில் போய் கேசை வாபஸ் வாங்குகிறோம் என்று சொல்ல மூர்த்தி அதிர்ச்சியாகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

பின் அவர்களை எப்படியோ சமாதானப்படுத்த பேங்க் ஆபிஸர் சரி நீங்க பணத்தை தந்துட்டு போங்க நான் வருகிறேன் என்று அனுப்பி வைக்கிறார். பின் மூர்த்தி வெளியே வர ஜீவா பணம் கிடைத்து விட்டதாக சொல்ல மூர்த்தி பணம் கட்டியாச்சு ஜீவா பணத்தை உள்ளே வை என்று சொல்ல பின் இருவரும் கதிரை வெளியே எடுக்கின்றனர். அப்போது ராத்திரிக்குள்ள உன்ன கூட்டிட்டு வரலைன்னா முல்லைக்கு என்ன ஆகி இருக்கு முன்னே தெரியல டா என்று மூர்த்தியும் ஜீவாவும் கதிர் தோளில் சாய்ந்து வருத்தப்பட கண்ணன் தனியாக நிற்பதை பார்த்து வர சொல்கிறார்.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…, மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

பிறகு கண்ணன் கதிரை வந்து கட்டி பிடித்துக் கொள்ள மூர்த்தி கண்ணனை திட்டுகிறார். இவனையும் நான் தானடா வளர்த்தேன். ஆனால் இவன் மட்டும் ஏன்டா இப்படி இருக்கான் என்று கேட்டு, அழுது கொண்டு தனியாக போய்விடுகிறார். பின் கண்ணன் ஜீவாவிடம் எல்லா பிரச்சனையும் முடிஞ்சா என்று கேட்க ஜீவா 5 லட்சம் பணத்தை கட்டி வெளியே எடுத்ததாக கூறுகிறார். அதைக் கேட்டு கண்ணன் அதிர்ச்சியாக மூர்த்தி கோபமாக கண்ணனை முறைத்து பார்க்கிறார். அடுத்ததாக அனைவரும் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது மீனா ஆராத்தி எடுக்க முல்லையில் அம்மா ஏதோ சொல்ல அவர் கடுப்பாகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here