‘அண்ணன், அண்ணி இப்போல்லாம் சரியே இல்லை’ – கதிரிடம் புலம்பும் ஜீவா!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடு முழுக்க கலகலப்பாகவே இருந்தது என்றே சொல்லலாம். மேலும் தனமும், சத்யமூர்த்தியும் தங்களது குழந்தையை பற்றி சந்தோசமாக பேசிக்கொண்டுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நேற்று தனத்திற்கு பலகாரங்கள் எல்லாம் வாங்கி வந்து தந்தார் மூர்த்தி. இதனால் கண்ணாவும், ‘இதெல்லாம் என்ன புதுசா இருக்கு’ என்று கேட்கிறார். மேலும் மூர்த்தி சந்தோஷத்தில் கண்ணனை போட்டு அமுக்க வலிதாங்க முடியாமல் கத்துகிறார். மேலும் ஜீவாவின் அம்மா மீனாவை பற்றி கேட்க மூர்த்தி எதையும் சொல்லவும் இல்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த சந்தோசத்திற்கு என்ன காரணம் என அனைவரும் யோசித்துக்கொண்டு தான் உள்ளனர். ஜீவாவின் அம்மா மீனா நம்மை பற்றிய அருமை தெரிந்ததும் வரட்டும் என்று தடாலடியாக கூறுகிறார். அடுத்ததாக முல்லையும், கதிரையும் காட்ட ஜீவா அண்ணன் அண்ணி மாறிவிட்டதாக சொல்கிறார்.

முல்லையும் அதேபோல சொல்ல கதிருக்கு கோவம் வருகிறது. அவர்கள் இருவரும் என்ன செய்தலும் அது நன்மைக்காக தான் இருக்கும் என்றும் கூறுகிறார். முல்லைக்கு இது குழப்பமாகவே உள்ளது. தனமும், மூர்த்தியும் தான் அம்மா, அப்பா ஆகப்போவதை பற்றி சந்தோசமாக பேசிக்கொண்டிருந்தனர்.

பாரதி பின்னாடியே சுற்றி தொழிலை கோட்டை விட்ட வெண்பா!!

பிறகு இருவரும் தூங்க திடீரென தனத்திற்கு குமட்டிக்கொண்டு வருகிறது. மூர்த்தியும் பயந்து என்ன என கேட்க தனத்திற்கு வாந்தி வருகிறது. சத்தமில்லாமல் வாந்தி எடுத்து விட்டு வருகிறார். மூர்த்தி தண்ணீர் எடுத்து வந்து தர குடித்து விட்டு மீண்டும் பேசிக்கொண்டுள்ளனர். இது ஏதோ கனவு போல இருப்பதாக தனம் சொல்ல மூர்த்தியும் சிரிக்கிறார்.

தனத்திற்கு பசிக்க வேறு செய்கிறது. அதனை மூர்த்தியிடம் சொல்ல அவர் சமையல்கட்டிற்கு எழுந்து செல்கிறார்.

தனது மாமாவின் இந்த அக்கறையை பார்த்து பூரிப்படைகிறார் தனம். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here