கர்ப்பமாக இருக்கும் உண்மையை வீட்டில் சொல்லாமல் மறைக்கும் தனம், சத்தியமூர்த்தி – பரபரப்பாக ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமும் சத்திய மூர்த்தியும் மீனாவை அழைக்க வீட்டிற்கு செல்ல அவர்கள் கண்டபடி பேசியதால் தனத்திற்கு கோவம் வந்து சண்டைபோட்டு செல்கிறார். மேலும் தனம் சத்தியமூர்த்தியை அழைத்து கொண்டு கோவிலுக்கு சென்று கர்ப்பமான விஷயத்தை சொல்ல தலைகால் புரியாமல் சந்தோஷமடைகிறார். இன்றைய எபிசோடில் டெஸ்ட் எடுக்க செல்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் எப்பொழுது வீட்டில் உள்ளவர்களிடம் தனது கர்ப்பத்தை பற்றி கூறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கையில் சத்தியமூர்த்தி பற்றி ஜனார்த்தனன் தவறாக பேசவும் கொதித்தெழுந்து அதனை தங்க முடியாமல் தனமும் அவரை கோவிலுக்கு அழைத்து சென்று கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறியதும் சந்தோஷமடைகிறார் சத்தியமூர்த்தி.

பாரதிக்கும், ஹேமாவிற்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க திட்டமிடும் வெண்பா – உண்மை தெரியவருமா??? அனல் பறக்கும் கதைக்களத்துடன் ‘பாரதி கண்ணம்மா’!!

இத்தனை நாள் உன்னை ஏமாற்றிவிட்டோம் என்று இருந்த மனக்கவலை முடிவடைந்ததாகவும் கூறினார். மேலும் மீனா தனம் வந்து போனதை அடுத்து குழப்பத்திலேயே இருக்க ஜனார்தனனும் கலையும் உன்னை இனிமேல் விடப்போவதில்லை என்று கண்டிப்பாக கூறுகின்றனர்.

மீனாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. வீட்டில் பாத்ரூம் கட்டுவதை பற்றி விசாரிக்க ஒரு ஆள் வர அவர்கள் தனம் மூர்த்திக்காக காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் கோவிலுக்கு சென்று வரும் தனம் மூர்த்தி அடுத்ததாக டெஸ்ட் எடுக்க கிளம்புகின்றனர்.

இவர்கள் காத்திருப்பதை கூட பார்க்காமல் அங்கிருந்து செல்கின்றனர். மருத்துவமனையில் தனம் பயத்துடன் அமர்ந்திருக்க உள்ளே டெஸ்ட் எடுக்க அழைக்கின்றனர். மேலும் டெஸ்ட் எடுக்க போக பயப்படும் தனத்தை ஆறுதல் அளித்து அனுப்பி விடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிறகு டாக்டர் வர கற்பமானதை உறுதி செய்கிறார். இதனால் சந்தோஷமும் அடைகின்றனர். மேலும் டாக்டர் 35 வயதானதால் மிகவும் கவனமாக இருக்கும் காலகட்டம் என்றும் எடுத்துரைக்கின்றனர். வீட்டில் இப்போதைக்கு சொல்ல வேண்டாம்.

4 மாதம் ஆன பிறகு வீட்டில் சொல்லுங்கள் என்று டாக்டர் கூறுகின்றனர். இவர்களும் கிளம்ப ரோடில் நடக்கும்போது சத்தியமூர்த்தி தனத்தின் கையை பிடித்துக்கொண்டு நடக்கிறார். தனமும் கையை தட்டி விடுகிறார்.

அடுத்ததாக ஜீவா மீனாவிற்கு கால் செய்ய இங்கு தனம் சண்டையிட்டதை மட்டும் கூறி தனம் என்னிடம் ஒரு மாதிரியும், உங்களிடம் ஒரு மாதிரியும் நடந்துகொள்வதாக கூறி போனை வைக்கிறார். இப்பொழுது தனம் கற்பதை பற்றி வீட்டில் சொல்லவும் மாட்டார். மேலும் இதனால் பல பிரச்சனைகளும் எழ போகிறது என்று மட்டும் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here