பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவை பிரிந்த ஜீவா அதனை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். இதனால் ஜீவாவின் வாழ்க்கையை பொறுத்து மூர்த்தியும் தனமும் ஜனார்த்தனன் வீட்டிற்கு மீனாவை சமாதானம் செய்ய கிளம்புகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் தான் கர்ப்பமான விஷயத்தை எப்படி சொல்வது என காத்துக் கொண்டுள்ளார். மேலும் கஸ்தூரி தனத்தின் முகத்தை பார்த்தே இவர் கர்ப்பமாக இருக்கிறாரோ?? என்று சந்தேகமும் படுகிறார். இந்நிலையில் தனம் மீனா வீட்டிற்கு கிளம்ப செல்ல பைக்கில் அமர மறுக்கிறார். சரி ஆட்டோவில் செல்லலாம் என்று அழைத்தால் அதற்கும் மறுக்கிறார். பின்பு இருவரும் நடந்து செல்கின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
வழியில் நடக்கும்போது தனம் கையை பிடிக்க மூர்த்தி பொது இடத்தில் இப்படி செய்ய கூடாது என்று கூறுகிறார். அடுத்ததாக தனமும் மூர்த்தியும் மீனா வீட்டிற்கு செல்ல கலை அவர்களை வரவேற்கிறார். ஜனார்த்தனன் அவர்களை கண்டுகொள்ளவும் இல்லை. என்ன மூர்த்தி என்ன விஷயம்? என்று ஜனார்த்தனன் கேட்க அதற்கு நல்லா இருக்கீங்களா?? என்று மூர்த்தி கேட்கிறார். இதற்கு ஜனார்த்தனன் நக்கலாக பதில் சொல்கிறார்.
அதன் பிறகு மீனா குழந்தையுடன் வர தனம் குழந்தையை கொஞ்சுகிறார். மீனாவிடம் ஜனார்த்தனன் கண் ஜாடையில் குழந்தையை கொடுக்க வேண்டாம் என்று சொல்ல தனம் அதற்குள் குழந்தையை வாங்கி விடுகிறார். தனம் குழந்தையை கொஞ்சி கொண்டு இருக்க ஜனார்த்தனன் இந்த நடிப்பு எல்லாம் இங்க பலிக்காது என்று சொல்கிறார்.
இதனை கேட்டதும் தனமும் மூர்த்தியும் அதிர்ச்சியடைகின்றனர். இப்படி நடிச்சு தான தம்பிகளை ஏமாத்தி வச்சு இருக்கீங்க. ஜீவா கூட உங்களுக்கு பயந்து தான் வராம இருக்காரு. நாங்க உங்களுக்காக தான் எல்லாமே பண்றோம் அப்டி இப்படினு சொல்லி உங்க பக்கத்துலயே உட்கார வச்சு இருக்கீங்க. உங்களுக்கு குழந்தை பெத்துக்க வழியில்லை தம்பிகளும் பெரிய ஆளா ஆன நமக்கு வழி இல்லைனு சொல்லி தானா இப்படி பண்றீங்க.
தம்பிங்க வாழ்க்கையையும் கெடுத்துட்டு நம்பி வந்த பொண்ணுங்க வாழ்க்கையையும் கெடுக்குறீங்க என்று கண்டபடி பேசுகிறார். மேலும் உங்களுக்கு குழந்தை பெத்துக்க வக்கும் இல்லை, இனிமேல் குழந்தையும் பொறக்காது அதனால உங்களுக்காக தான் குழந்தை பெத்துக்கலனு நாடகமாடுறிங்களா?? என்று சொல்ல தனத்திற்கு கோவம் வருகிறது.
சடாலென வார்த்தையை அடக்கி பேசுங்க என்று கத்துகிறார். யாரை பார்த்து என்ன வார்த்தை சொன்னிங்க. அவரை பத்தி பேச நீங்க யாரு. நாங்க குழந்தை பெத்துக்குறதும் பெத்துக்காததும் எங்க இஷ்டம் அதை பத்தி நீங்க பேச கூடாது என தனம் கோவமாக பேசி மூர்த்தியை இழுத்து செல்கிறார். தனம் மூர்த்தியை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு செல்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.