பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது தனம் கர்ப்பமானதை அடுத்து அந்த விஷயத்தை எப்பொழுது சொல்வார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் முல்லையை பார்க்க அவரது அம்மாவும், கஸ்தூரியும் வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா வீட்டை விட்டு வெளியேறியதை அடுத்து பல சங்கடங்கள் வீட்டில் நடந்து வருகிறது. மேலும் இன்றைய எபிசோடில் தனத்தை முல்லை சாப்பிட அழைக்க தனம் வர மறுக்கிறார். உடம்பு எதுவும் சரியில்லையா என கேட்க ஒன்றும் இல்லை என்று சமாளிக்கிறார். அதன் பின் முல்லையை பார்க்க அவரது தாயாரும், கஸ்தூரியும் வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கஸ்தூரி தனத்தின் முகவாட்டத்தை கண்டறிகிறார். முகம் ஒரு மாதிரி பளபளன்னு இருக்கே என்று கேட்க தனம் பதட்டமடைகிறார். கர்ப்பமாக இருக்கியா?? என்று கேட்க அதற்கு முல்லையின் அம்மா அப்படியே கர்ப்பமா இருந்துட்டாலும்?? 15 வருஷம் ஆச்சு. காலகாலத்துல இதெல்லாம் நடந்து இருக்கணும் என்று கூற முல்லை தன் அம்மாவை திட்டுகிறார்.
தனம் அங்கு உட்கார முடியாமல் உள்ளே செல்கிறார். முல்லை அவர்களை ரூமிற்கு அழைத்து செல்ல வீட்டில் நடந்த விஷயத்தை பற்றி கேட்கின்றனர். முல்லையும் நடந்ததை கூற தனம் இதெல்லாம் பண்ற ஆளு தான் என்று கூறுகிறார் முல்லையின் அம்மா. இதற்கு முல்லை கடிந்து மீனா கர்ப்பமாக இருந்தபோது எப்படி பார்த்துக் கொண்டார் தெரியுமா?? என்று கூறி கோவப்படுகிறார்.
நிஷா, ரியோவின் முகத்திரையை கிழிக்கும் அனிதா!!
அடுத்ததாக சமையல் வேலையை தனமும், முல்லையும் பார்த்துக்கொண்டுள்ளனர். அப்பொழுது கஸ்தூரி உள்ளே வருகிறார். முல்லையிடம் பேச்சு கொடுக்க தனம் தன் அம்மா பற்றி விசாரிக்கிறார். மேலும் தன் அம்மாவை பார்க்கணும் போல இருக்கு என்றும் கூறுகிறார். அப்பொழுது முல்லை கடுகை தாளிக்க தனத்திற்கு குமட்டிக்கொண்டு வருகிறது.
இதனை பார்த்த கஸ்தூரிக்கு சந்தேகம் வருகிறது. முல்லையிடம் கர்ப்பமாக இருந்தால் இப்படி வாந்தி வரும் அதனால் இப்படி நடிக்கிறாளா?? என்று கேட்க முல்லைக்கு கோவம் வருகிறது. அதன் பிறகு தனமும் சத்யமூர்த்தியும் மீனாவை சமாதானம் செய்து அழைத்து வர ஜனார்த்தனன் வீட்டிற்கு கிளம்புகின்றனர். அப்பொழுது தனம் பைக்கில் ஏற மறுக்கிறார். அதோடு எபிசோடும் முடிவடைகிறது.