கர்ப்பத்தை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் தனம் – கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மீனா!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பல பரபரப்பான கட்டங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் மீனா வீட்டில் அனைவரிடமும் சண்டை போட்டு வீட்டை விட்டே செல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குழந்தையை காரணம் காட்டி மீனா குடும்பத்துடன் சண்டையிட்டு வருகிறார். இதற்கிடையில் மீனாவின் குழந்தை அழுது கொண்டே உள்ளது. என்ன செய்வது என்றே தெரியாமல் மீனா அம்மாவிற்கு கால் செய்ய அவர்கள் வந்து மீனாவை அழைத்து செல்கின்றனர். அந்த நேரம் பார்த்து தனம் கோவிலுக்கு சென்றிருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நீண்ட நேரத்திற்கு பிறகு கோவிலில் இருந்து வீட்டிற்கு வருகிறார் தனம். வந்தவுடன் கிச்சனுக்கு செல்லும் தனம் கர்ப்பமாக இருப்பதை நினைத்து ஆனந்தமடைகிறார். மேலும் மாமாவிடம் சொல்ல வேண்டும் என்று தவித்துக்கொண்டுள்ளார். அடுத்ததாக முல்லை கிச்சனுக்கு வருகிறார். நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூற அதிர்ச்சியடைகிறார்.

அப்பொழுது மீனாவும் அவரது அம்மா, அப்பாவும் வீட்டிற்கு வருகின்றனர். என்ன நடந்தது என்று கூட கேட்காமல் கண்டபடி பேசுகின்றனர். ஜீவாவின் அம்மாவும் மீனா நாடகமாடுகிறாள் என்று கூற மீனாவின் குடும்பமே கொந்தளிக்கிறது. ஒரு நிமிடம் கூட இங்கே இருக்க மாட்டேன் என்று சொல்கிறார் மீனா.

வெண்பாவிற்கு தாலி கட்ட செல்லும் பாரதி – தடுத்து நிறுத்துவரா அகில்??

தனம் மீனாவிடம் மன்னிப்பு கேட்க ரொம்ப நடிக்காதீங்க என்பது போல பேசுகிறார். இதனால் ஜீவாவும் கோவமடைகிறார். உடனே ஜனார்த்தனன் பச்ச உடம்பு காரிய எப்படி கொடுமை படுத்துறீங்க என்று சகட்டுமேனிக்கு பேச ஆரம்பிக்கிறார். மேலும் மீனாவும் நல்லா நடிக்கிறிங்க. உங்களுக்கு நான் குழந்தை பெத்துக்கிட்டது புடிக்கல. அதான் இப்படி பண்றிங்க என்று சொல்கிறார்.

முல்லையும் மீனாவிடம் வார்த்தையை விடாதீர்கள் என்று கோவமடைகிறார். ஆனாலும் தனம் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்லி இருந்தால் இவ்வளவு பிரச்னை நடந்தே இருக்காது. மீனாவும் இனிமேல் இந்த வீட்டிற்கு வரவே மாட்டேன் என்றும் கூறிவிட்டு செல்கிறார். எவ்வளவு கெஞ்சியும் நிற்பதாக இல்லை. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here