பொறுப்பான குடும்ப தலைவராகும் கண்ணன்…!சிக்கனமாக செலவு செய்யும் ஐஸ்வர்யா!!!

0

ஏராளமான ரசிகர்களின் பேராதரவோடு விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலின் இன்றைய கதையில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க செல்லும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா நடு வழியில் பைக்கில் வரும் தனம் மற்றும் மூர்த்தியை சந்திக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூர்த்தியின் நண்பர் உதவியால் தங்க வீடு கிடைத்து அந்த வீட்டில் தங்களின் புது வாழ்க்கையை  சந்தோஷமாக  ஆரம்பிக்கின்றனர் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா.

இந்நிலையில் இன்று கடையில் சாப்பாடு வாங்கி சாப்பிடுகின்றனர். அந்த வேளையில் வீட்டில் சமைப்பதற்கு பாத்திரங்கள் இல்லை எனவும், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க வேண்டும் எனவும் இருவரும் திட்டமிடுகின்றனர்.

அதன் பின்னர் ஐஸ்வர்யா கண்ணனிடம், நீ படிக்கனும் இது  ஓ குடும்பத்தின் ஆசை. என்னால் அது கெட்டு போக வேண்டாம் என பேசி கொண்டே ஒருவரை ஒருவர் கட்டி கொள்கின்றனர். அதன் பின்னர் கடைக்கு கிளம்புகின்றனர்.

இந்நிலையில் தனத்தை டாக்டரிடம் கூப்பிட்டு செல்ல ரெடியாக இருக்கும் மூர்த்தியிடம் தனத்தின் அம்மா தனத்தை பற்றி கூறிக் கொண்டிருக்கிறார். அதன் பின்னர் முல்லை தனத்தை நோக்கி டாக்டரிடம் அனைத்து விவரங்களையும் கேட்டு கொண்டு வருமாறு கூறி, தனம் மறந்து போன ஸ்கேன் ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு வந்து தருகிறார்.

அதன் பின்னர் தனத்தின் அம்மா மூர்த்தியை கிண்டலாக சில விஷயங்களை  சொல்கிறார். அதை கேட்டு தனம் கோவப்பட்டு அம்மாவை திட்டுகிறார். அதன் பிறகு இருவரும் ஹாஸ்பிடலுக்கு  கிளம்புகின்றனர்.

வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு கடைக்கு செல்லும் கண்ணன், ஐஸ்வர்யாவிடம் பணம் கம்மியாக இருப்பதாக கூறுகிறார். அதற்கு ஐஸ்வர்யா தேவையான பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கலாம் என்று சொல்லி பொருட்களை வாங்குகின்றனர்.

கடைக்கு சென்றதும் பொருட்களின் விலையை பார்த்து அதிர்ச்சியாகும் கண்ணன். இருப்பதிலேயே குறைவான விலை உள்ள பொருட்களை தெரிந்து எடுத்து வாங்குகிறார். அதன் பின்னர் பில் போடும் இடத்தில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா  பதட்டத்துடன் இருக்கின்றனர். பில் மதிப்பு தனது கையடக்க பணத்திற்குள் வந்ததும் இருவரும் சந்தோஷம் அடைகின்றனர்.

 வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வெளியே மகிழ்ச்சியாக பேசி நடந்து வரும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா, வழியில் எதிரே வரும்  தனம் மற்றும் மூர்த்தி பைக்கில் மோதுமாறு நிற்கின்றனர். அவர்களை பார்த்த தனம் மற்றும் மூர்த்தி வருத்தத்தில் உள்ளனர். இவ்வாறாக இன்றைய கதை முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here