பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு புதிய ஐடியாவை அறிமுகப்படுத்தும் கதிர் – ஏற்றுக்கொள்வாரா மூர்த்தி! சூடுபிடிக்கும் கதைக்களம்!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று கதிர் புதிதாக ஒரு எலக்ட்ரிக் வண்டியினை வாங்கி வருகிறார். அந்த வண்டியினை வைத்து டோர் டெலிவரி செய்ய இருப்பதாக கூறுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிர் கூறிய டோர் டெலிவரி ஐடியாவை மூர்த்தி வேண்டாம் என்று கூறி விடுகிறார். அதில் பல பிரச்சனைகள் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். இதனால் கதிர் சோர்வு அடைந்து விடுகிறார். ஆனால், முல்லை கதிரை உற்சாகப்படுத்தி சில ஐடியாக்களை கூறுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து கதிர் புதிதாக தனது நண்பனின் எலக்ட்ரிக் வண்டியினை வாங்கி வருகிறார். அதே போல் டோர் டெலிவரி செய்யலாம் என்று ஐடியா கூறுகிறார். அதே போல் இந்த எலெக்ட்ரிக் வண்டியினை பயன்படுத்துவதன் மூலமாக பெட்ரோல் விலை போன்ற பிரச்சனைகளை சமாளித்து விடலாம் என்று கூறுகிறார்.

இதனால் குடும்பத்தினர் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர். கதிர் எவ்வளவு அருமையாக யோசிக்கிறார் என்று அனைவரும் ஆச்சர்யமும் அடைகின்றனர். பின், அனைவரும் சாப்பிட உட்காருகின்றனர். எதோ பேசும் போது மீனா மற்றும் முல்லை இருவரும் சண்டை போட்டு கொள்கின்றனர்.

இதனால் குடும்பத்தினர் அனைவரும் இருவரையுமே திட்டுகின்றனர். ஜீவா இருவரும் ஏன் சண்டை போடுகின்றனர் என்று தனத்திடம் கேட்க அவர் இருவரும் அப்படி தான், சிறிய சண்டை தான் போடுகின்றனர். பெரிய சண்டையெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறி விடுகிறார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் இனி இவருக்கு பதில் இவர் தானா?? ஷாக்கான ரசிகர்கள்!!

பின், மீனா தான் அப்பா கடைக்கு போவதாக கூறுகிறார். இந்த முறை குழந்தையையும் சேர்த்து அழைத்து போக இருப்பதாக கூறுகிறார். தனம் முதலில் தடுத்தாலும், பின் சரி என்று கூறி விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here