பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கதிர் பெரிய ஆபத்தில் இருந்து இப்பொழுது தான் மீண்டு வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மூர்த்திக்கு கதிரின் மேல் இருந்த கோவம் நீங்கி அவரை பார்ப்பதற்காக வீடு வரைக்கும் சென்று விட்டார். மேலும் கதிரிடம் நீ இல்லாமல் வீடே என்னவோ மாதிரி இருக்கு.
மறுபடியும் வீட்டுக்கே வந்துடு என்று சொல்கிறார். மேலும் முல்லையிடம் உனக்கு சம்மதமா என்று கேட்கிறார். அதற்கு அதுதான் மாமா எனக்கு சந்தோசம் என்று சொல்கிறார் முல்லை. முல்லையும் கதிரும் வீட்டிற்கு வந்ததால் சந்தோஷமடைந்த தனம் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து செல்கிறார்.
தன் குடும்பத்துடன் செல்வராகவன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்.., இணையத்தில் வைரல்!!
மேலும் கதிர் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்து இது போட்டியில் வெற்றி பெற்ற பணம் இதை வச்சுக்கோங்க என்று சொல்கிறார். இதனால் மீனாவின் முகமே வாடி போகிறது. ஜனார்த்தனனிடன் தானே கதிர் சவால் விட்டு சென்றார். இப்பொழுது அதை நிறைவேற்றியும் விட்டார்.
இப்படி இருக்க ஜனார்தனனுக்கு இது சுத்தமாகவே பிடிக்காமல் போகுமாம். இப்படி மறுபடியும் அனைவரும் சேர்ந்து விட்டால் கண்டிப்பாக ஜீவாவை வீட்டோட மாப்பிள்ளையாக அழைத்து செல்ல முடியாது. எனவே தான் ஜனார்த்தனன் குடும்பத்தை பிரிக்க பிளான் போடுவாராம். வீட்டை விரைவில் காலி செய்யும்படி தொந்தரவு கொடுப்பாராம்.