ஐஸ்வர்யா, கண்ணன் காதலை பற்றி தெரிந்துகொள்ளும் கஸ்தூரி – ஐஸ்வர்யா எடுக்கப்போகும் விபாரீத முடிவு!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைய எபிசோடில் பல கலாட்டாக்கள் நடந்துள்ளது. மேலும் ஐஸ்வர்யா இந்த நிச்சயத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் இருக்க கஸ்தூரி அவரை போட்டு அடிக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மல்லி வீட்டில் அனைவரும் தங்கியுள்ளனர். ஆனால் மல்லி ஆடம்பரம் பகட்டு என்று யாரையுமே மதிக்கவில்லை. மேலும் பாக்கியலட்சுமி குடும்பமும் இணைந்துள்ளதால் வீடே கொண்டாட்டமாக உள்ளது.

மேலும் செழியன், தனத்திற்கும் ஏற்பட்ட பிரச்சனையால் செழியன் வீட்டை விட்டே வெளியேற முடிவெடுத்து விட்டார். தனம் தன் மரியாதையையும் விட்டுவிட்டு செழியனிடன் மன்னிப்பு கேட்கிறார்.

ஆனாலும் எதையும் காதில் வாங்காமல் வீட்டை விட்டு செழியன் சென்று விடுகிறார். மேலும் இனி வரும் எபிசோடுகள் பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது ஐஸ்வர்யா பிரஷாந்த் நிச்சயம் பற்றிய தகவல் தான் அது.

ஐஸ்வர்யா கண்ணனிடம் பேசிக்கொண்டிருக்க அதனை அவரது சித்தி கஸ்தூரி கேட்டுவிட்டு அடி நொருக்கிறார். இதனால் நிச்சயத்திற்கு ஒத்துக்கொள்ளும் படி கட்டாயப்படுத்துகிறார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த சண்டையால் தான் அனைவரும் மதுரைக்கு கிளம்புகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்தடுத்து பல சுவாரசியமான சம்பவங்கள் நடக்க இருப்பது இதன் மூலம் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here