பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ப்ரோமோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இத்தனை நாட்கள் வீட்டில் ஓரளவிற்கு பிரச்சனைகள் இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்தது. கண்ணனை வீட்டில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் புதிய ட்விஸ்ட்டாக முல்லையை வைத்து கதையை நகர்த்தி வருகின்றனர்.
அதாவது முல்லைக்கு குழந்தை பெற்று கொள்ள வாய்ப்பில்லை என்று டாக்டர் சொன்ன விஷயம் நாம் அனைவர்க்கும் தெரியும். இந்நிலையில் தற்போது கதிருக்கு மட்டுமே தெரிந்த இந்த விஷயம் முல்லைக்கும் தெரிய வர இதனால் மனதுடைந்து போகிறார்.
அதுமட்டுமில்லாமல் கதிர் முல்லையை தேடி அலைந்து கொண்டுள்ளார். கடைசியில் முல்லை ஒரு கோவிலில் அமர்ந்து அழுது கொண்டுள்ளார். கதிர் அங்கு வர தன்னால் உங்களுக்கு குழந்தை பெற்று கொடுக்க முடியாது.., என்ன விட்டுடுங்க என்று சொல்லி அழுகிறார் முல்லை.
கதிர் எனக்கு நீ மட்டும் தான் முக்கியம் என்று கத்துகிறார். வீட்டில் உள்ள அனைவர்க்கும் இந்த விஷயம் தெரிய கதறி அழுகின்றனர். இதோடு ப்ரோமோவும் முடிவடைகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்