விஜய் டிவியில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் இணைந்து மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியல் பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மல்லி வீட்டிற்கு அனைவரும் வர ஐஸ்வர்யா, பிரஷாந்த் நிச்சயத்தை செய்து விடலாம் என்று முடிவெடுக்கின்றனர். நிச்சயம் ஆகும் புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது.
கண்ணனுக்கும் ஐஸ்வர்யாவிற்கும் தான் ஜோடி என்று நாம் அனைவரும் நினைத்து கொண்டிருக்க இப்பொழுது பிரஷாந்துக்கு ஜோடியாக போகிறதை நினைத்து பலரும் வருத்தத்தில் தான் உள்ளனர். மேலும் பாக்கியலட்சுமி சீரியலிலும் எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வருகிறது.
அதாவது செழியன் வீட்டில் உள்ள யாரிடமும் சொல்லாமல் பிளாட் வாங்கிய விஷயம் ஜெனி மூலம் தெரிய வருகிறது. இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் கோவத்தில் உள்ளது. இதனால் ஜெனியிடம் கோவப்பட்டு அடிக்க செல்கிறார்.
இதனை பார்த்த தனம் பொண்ணை இப்படி கை நீட்டி அடிக்கிற தப்பு இல்லையா?? என்று எதிர்த்து பேச அதற்கு இது எங்க குடும்ப பிரச்சனை என்று கூறுகிறார். இன்றைய எபிசோடில் பல ட்விஸ்டுகளுடன் தான் முடிவடைந்தது. இப்படி இருக்க மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அனைவரும் இணையுள்ளனர்.
அதாவது தனம் குடும்பத்துடன் வீட்டிற்கு செல்ல உள்ளார். அந்த ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்றைக்கு நடந்த எபிசோடை வைத்து பார்க்கும்போது நடந்த சண்டையில் தான் குடும்பம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சென்றுள்ளதாக தெரிகிறது.