பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. குடும்ப ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்த சீரியலில் சில நாட்களாகவே பல சண்டை சச்சரவுகள் வந்த வண்ணம் இருந்தது. அதற்கு காரணம் ஜனார்த்தனன், மல்லி, பார்வதி போன்றோர் தான்.
ஜனார்த்தனன் ஒரு பக்கம் கொடுத்த காசை திருப்பி கொடுக்க வக்கில்ல என்று கேவலமாக பேசி கதிரை வீட்டை விட்டே வெளியே அனுப்பினார். கதிரும் பட்ட அசிங்கத்தை துடைக்க கஷ்டப்பட்டு உழைத்து அந்த பணத்தையும் திருப்ப கொடுத்துவிட்டார். ஆனால் கடைசியில் அந்த வீடு யாருக்குமே சொந்தமில்லாமல் போய்விட்டது. அதாவது ஜனார்த்தனன் அனைவரையும் கேவலமாக பேசி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
கதிர் தான் அவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். வீடு இப்படி ஒரு நிலைமையில் வருகிறது. இப்படி இருக்க தனம் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது பீச்சில் அட்டகாசம் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். குடும்பமே இப்படி கஷ்டப்படும் சூழ்நிலையில் இப்படி ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருக்கீங்களே இன்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றன. சீரியலுக்கு இதுக்கும் என்னடா சம்பந்தம் என்று நெட்டிசன்கள் பலரும் இதற்கு பதிலடி கொடுத்து கமெண்ட் செய்து வருகின்றன.
View this post on Instagram