விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், நடித்து வரும் முன்னணி கதாபாத்திரம் ஒருவருக்கு நிகழ்ந்த சோக சம்பவம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பகீர் தகவல் :
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியல், 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக போய் கொண்டிருக்கிறது. வீட்டை விட்டு சென்ற கதிர், மூர்த்தியிடமிருந்து பிளான் பண்ணி வீட்டை வாங்கும் ஜனார்த்தன் என்ற ட்விஸ்ட்டுகளுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த தொடரில், கண்ணன் மனைவியாக ஐஸ்வர்யா என்ற பாத்திரத்தில் நடித்து வரும் சாய் காயத்ரி, பற்றிய சோகமான செய்தி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, இவருக்கு முன்பாக 2 ஹீரோயின்கள் இந்த சீரியலில் நடித்து விலகி விட்டனர். 3வதாக இவர் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலுக்கு வரும் போது, இவருடைய வீட்டார் இதில் நடிக்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்தார்களாம்.
தனது 2ம் மனைவியின் மகளுக்கு எவ்வித பாரபட்சமும் காட்டாத சரத்குமார் – சே.,எவ்ளோ நல்ல மனுஷன் பா!!
ஏற்கனவே 2 பேர் விலகி உள்ளதால், இந்த கேரக்டர் மீது மக்களுக்கு வெறுப்பு இருக்கும். இதில் நீ நடிக்க வேண்டாம் என கண்டிஷன் போட்டுள்ளனர். ஆனால் அதை மறுத்த சாய் காயத்ரி, தனது வீட்டை விட்டு வெளியேறி, 3 மாதம் வெளியே தங்கி இந்த சீரியலில் நடித்ததாக சொல்லப்படுகிறது. இதனைக் கேட்ட ரசிகர்கள், இந்த சீரியலுக்காக இவர் இவ்ளோ பாடுபட்டு இருக்கிறாரா? என மிரண்டு போய் உள்ளனர்.