பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பல எதிர்பாராத விஷயங்கள் நடந்து வருகிறது. மீனா கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதால் இருந்து வீட்டில் உள்ள அனைவரும் சோகத்தில் உள்ளனர். இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கர்ப்பமாக இருந்ததை அடுத்து அதனை யாரிடமும் சொல்லாமல் இருக்கிறார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய மீனா ஜீவாவிடம் பேசவும் இல்லை, காலை அட்டண்ட் செய்யவும் இல்லை. மேலும் ஜனார்த்தனன் வேறு மீனாவிடம் குடும்பத்தை பற்றி தவறான கருத்துக்களை கூறுகிறார்.
எதுக்கெடுத்தாலும் அண்ணா, அண்ணி என்று இருந்தாலும் குழந்தையை யார் பார்த்துக்கொள்வது. குழந்தைக்கு எதாவது வேணும்னா அவங்ககிட்ட தான் போய் கெஞ்சனும் என்று சொல்ல மீனா குழப்பமடைகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் மூர்த்தி வேறு மீனாவை சமாதானபடுத்த செல்வதாக கூறுகிறார். தற்போது விஜய் டிவி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வரும் காட்சிகளை வைத்து பார்க்கும்போது மீனாவை அழைக்க சென்ற மூர்த்தியை ஜனார்த்தனன் அசிங்கப்படுத்தியுள்ளார்.
குழந்தை பெற்றால் தானே அந்த அருமை தெரியும் என்று கூறி அசிங்கப்படுத்தியுள்ளார். இதனால் தனம் கோவப்பட்டு அவரை கோவிலுக்கு அழைத்து செல்கிறார். அதில் உங்களை குழந்தை பெத்துக்க முடியாதுனு சொல்ல அவன் யாரு என்று கோவப்படுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸில் சித்ராவுக்கு பதில் இனி இவரா??
அதற்கு மூர்த்தி அது உண்மை தானே என்று சொல்ல தனம் அழுதுகொண்டே நீங்க அப்பாவாக போறீங்க என்று சொல்ல மூர்த்தி அதிர்ச்சியடைகிறார். மேலும் என்ன செய்வது என்று தெரியாமல் ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். இதோடு ப்ரோமோ முடிகிறது.