விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது நினைத்தபடியே கதிர் தனியாக ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்து விட்டார். அதற்கு முல்லையின் அப்பா பக்கபலமாக இருக்க கதிருக்கு அவ்வளவு சிரமம் இருக்கவில்லை. இந்நிலையில் இப்பொழுது கடை திறப்பு விழா கோலாகலமாக நடந்து கொண்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மூர்த்திக்கு தம்பி கடை ஆரம்பிக்கிறார் என்று தெரிந்ததில் இருந்தே தனி சந்தோசம் தான். இந்நிலையில் கடைதிருப்பு விழாவில் ஓரமாக நின்று கொண்டு ஒரு சின்ன குழந்தையிடம் காசை கொடுத்து இட்லி வாங்கி வர சொல்கிறார். கதிரும் கட்டி கொடுக்க வெளியில் வந்து மூர்த்தி அண்ணனை பார்த்ததும் சந்தோஷமடைகிறார்.
மேலும் பூரி, பொங்கல் வடை என கட்டி தனது அண்ணனுக்கு கொடுத்து விடுகிறார். இதனால் மூர்த்தியும் சந்தோஷமடைகிறார். வீட்டிற்கு சென்று கயலும் மூர்த்தியும் சாப்பிடுகின்றனர். ஆனந்த கண்ணீருடன் தனது தம்பியையும் வாழ்த்துகிறார் மூர்த்தி. இதோடு ப்ரோமோவும் முடிவடைகிறது.