பாண்டியன் ஸ்டோர் கதைக்களம் இப்போது தான் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஐஸ்வர்யா மூலம் குடும்பத்தில் உள்ளவர்கள் தனத்திற்கு கேன்சர் வந்த விஷயத்தை தெரிந்து கொள்கின்றனர். இதனால் தனத்தை எல்லோரும் நிற்க வைத்து கேள்வி கேட்கின்றனர். இந்த விஷயம் தெரிந்து மூர்த்தி அடுத்து என்ன முடிவெடுக்க போகிறார் என்று தெரியவில்லை. இப்படி இருக்கும் சூழலில் சீரியல் விரைவில் முடியப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. கதையும் அதற்கு ஏற்றார் போல் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இது தவிர பாண்டியன் ஸ்டோர் பார்ட் 2 வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சீசன் 2 குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த சீசன் 2வில் தனம், ஐஸ்வர்யா, மீனா இவர்கள் மூவரும் ஆக்சிடெண்டில் இறந்து விடுவார்களாம். அதன் பின் முல்லை தான் தனத்தின் இடத்தில் இருந்து குடும்பத்தை கொள்வாராம். மேலும் மூர்த்தி ஜீவா எல்லோரும் குடும்பத்திற்காக பாடுபடுவார்களாம். பாண்டியன் ஸ்டோர்ஸில் எப்படி அண்ணன் தம்பிகள் ஒன்றாக இருக்கிறார்களோ அதே போல் தான் சீசன் 2 வில் பாண்டியன், கயல், முல்லையின் குழந்தை எல்லோரும் ஒன்றாக வளர்வது போன்று கதைக்களம் நகருமாம்.