முல்லையின் அக்கா போட்டோவை பார்த்து ஷாக்காகும் தனம் மூர்த்தி – பாண்டியன் ஸ்டோர்ஸில் தொடங்கிய பிளாஷ் பேக்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் தான் திருடினார் என்ற உண்மை தெரிந்ததும், முல்லையும் கதிரும் கண்ணனிடம் பேசாமல் தவிர்க்கின்றனர். மேலும் ஐஸ்வர்யாவிடம் கோவமாக நடந்து கொள்கிறார் கண்ணன்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

நேற்றைய எபிசோடில் கதிரும் முல்லையும் கண்ணனை வெளுத்து வாங்கி விட்டனர். மேலும் முல்லையிடம் கெஞ்சுகிறார் கண்ணன். அடுத்ததாக கண்ணன் வழக்கம் போல காலேஜ் கிளம்ப முல்லையிடம் போய்ட்டு வருவதாக சொல்கிறார். ஆனால் முல்லை கண்டுகொள்ளவே இல்லை. இதனால் மீனா என்ன என்று விசாரிக்க நேற்று நடந்த விஷயத்தை சொல்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் என்ன தப்பு என்று மீனா கேட்க அதற்கு முல்லை கோவித்துக்கொண்டு செல்கிறார். அடுத்ததாக கடையில் லாட்டரிக்காக அனைவரும் காத்துக்கொண்டுள்ளனர். மீனாவை ஏதாவது ஒரு சீட்டை எடுக்க சொல்ல கயலும் மீனாவும் சேர்ந்து எடுக்கின்றனர். சீட்டில் ஒருவரின் பெயர் வர அவருக்கு இண்டக்சன் ஸ்டவ் கொடுக்கின்றனர்.

அடுத்து கண்ணன் ஐஸ்வரியா மீது எரிந்து விழுகிறார். கண்ணனின் இந்த நடவடிக்கை ஐஸ்வர்யாவுக்கு வித்தியாசமாக தெரிகிறது. அடுத்ததாக குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக பேசிகொண்டுள்ளனர். தனத்தை கலாய்த்து பேசிகொண்டுள்ளனர். அடுத்ததாக அனைவரின் சின்ன வயது புகைப்படங்களை பார்த்துக்கொண்டுள்ளனர்.

‘பிக் பாஸ்’ சாண்டி மாஸ்டருக்கு கிடைத்த அங்கீகாரம் – குவியும் வாழ்த்துக்கள்!!

அடுத்து மீனா ஜீவா போட்டோவை பார்த்து ரசித்துக்கொண்டுள்ளார். முல்லை கதிர் புகைப்படத்தை பார்த்து ரசித்துக்கொண்டுள்ளார். அடுத்ததாக இன்னொருவர் புகைப்படம் வர அதனை பார்த்து தனம் ஷாக்காகிறார். மூர்த்தியும் ஷாக்காகிறார். இதனை பார்த்து யார் என்று மீனா கேட்க முல்லை இது தன் அக்கா மல்லி என்று சொல்கிறார். உடனே பழைய பிளாஷ் பேக் எல்லாம் வருகிறது. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here