கண்ணன் பணத்தை திருடிய விஷயத்தை கதிரிடம் சொல்லிவிடும் முல்லை – பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் நடக்கப்போகும் பிரச்சனை??

0
நான் உன்னை காதலிக்கவே இல்லை - உண்மையை போட்டுடைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்!!
நான் உன்னை காதலிக்கவே இல்லை - உண்மையை போட்டுடைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் பணத்தை திருடியது முல்லைக்கு தெரியவர அதனை கதிரிடம் சொல்லி விடுகிறார். இதனால் கண்டபடி திட்டி விடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா முல்லையிடம் தனக்கு காலேஜ் ஃபீஸ் கட்டியது கண்ணன் மாமா தான் என்று சொல்ல முல்லைக்கு கோவம் வருகிறது. எப்படி இந்த பணம் கிடைத்தது என்று கேட்க வீட்டில் பணத்தை திருடியதாக சொல்கிறார். இதனை முல்லை கதிரிடம் சொல்கிறார். கதிர் கோபமடைந்து கண்ணனை தேடி செல்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கண்ணனை கன்னத்தில் பளார் பளார் என அறைகிறார். கண்ணன் தான் செய்தது தப்பு தான் என கதறுகிறார். உன்னை அண்ணனிடம் சொல்லியே ஆக வேண்டும் என்றும் கூறுகிறார். கதிர் விடா புடியாக கண்ணனை மூர்த்தியிடம் அழைத்து செல்கிறார். ஆனால் மூர்த்தியும், தனமும் சந்தோசமாக இருப்பதை பார்த்து அதனை கெடுக்க கதிருக்கு மனம் வரவில்லை.

அவங்க சந்தோசத்தை கெடுக்க கூடாதுனு தான் இப்போ நான் எதுவும் சொல்லல. அண்ணனை அழ வைக்க மனசில்லை என்று சொல்கிறார். பணத்தை காணோம்னு எல்லாரும் அழுகும்போது நீ பேசாமல் தானே இருந்த என்று கோவமடைகிறார் கதிர். இனி என் முன்னாடியே நிக்காத என்று கண்ணனை தள்ளிவிட்டு செல்கிறார்.

அடுத்து அந்த பணம் யாரு வச்சது என்று முல்லை கேட்க ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். அடுத்து முல்லை நீங்க தான் வச்சு இருப்பிங்க எனக்கு தெரியும் என்று சொல்ல அதற்கு கதிரும் ஆமாம் என்று ஒத்துக்கொள்கிறார். மேலும் இரவில் வேலைக்கு சென்றதையும், போஸ்டர் ஒட்டியதையும் சொல்கிறார்.

இதனை கேட்ட முல்லை ஷாக்காகிறார். எனக்காக எவ்வளவு செஞ்சீங்களா?? என்று கட்டிப்பிடிக்கிறார். இன்னொரு பக்கம் கண்ணன் தான் செய்த தவறை நினைத்து கவலைப்படுகிறார். முல்லை மீண்டும் யோசித்துக்கொண்டுள்ளார். அடுத்ததாக முல்லையிடம் வந்து மன்னிப்பு கேட்கிறார். முல்லை கதிர் போஸ்டர் ஓட்ட சென்றதை பற்றி சொல்கிறார்.

மொட்டை மாடி போஸில் ரம்யா பாண்டியனையே மிஞ்சிட்டீங்களே ஐஸ்வர்யா – சொக்கி போன ரசிகர்கள்!!

இதனால் மனமுடைந்து போகிறார். கதிரிடம் சென்று மன்னிப்பும் கேட்கிறார். ஆனால் கதிர் அதனை காது கொடுத்து கூட கேட்கவில்லை. நீ பேசாதது ஒரு மாதிரியா இருக்கு. முல்லை அண்ணியும் என்கிட்ட பேச மாட்டேங்குது என்று சொல்கிறார். நான் செஞ்சதை அண்ணன் அண்ணிகிட்ட போய் நடந்த சொல்றேன் என்று சொல்ல ரொம்ப நடிக்காத என்று சொல்கிறார். அண்ணன் அண்ணி இதனால எவ்வளவு கஷ்டப்படுவாங்கனு நீ நினைக்கவே இல்லைல என்றும் சொல்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here