விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது புதுமுகமாக ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இதனால் இன்றைய எபிசோடுக்காக மக்கள் பலரும் ஆர்வத்தில் உள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பல திருப்பங்களுடனும் சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது. எப்பொழுது சண்டை வந்தாலும் ஒற்றுமையால் அதனை ஜெயித்து விடுவர். மூர்த்தி, தனம் தான் குடும்பத்தையே தாங்கி வருகின்றனர்.
மீனா அடிக்கடி சண்டை போட்டாலும் வெளியிடங்களில் குடும்பத்தை விட்டு கொடுக்க மாட்டார். மேலும் தற்போது அல்லியை புது வரவாக பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் மூர்த்தியும் அவரை எந்த முக சுழிப்பும் இல்லாமல் வரவேற்க மல்லிக்கு ஆச்சரியமாக உள்ளது.
மேலும் மக்கள் மத்தியிலும் இந்த சீரியல் நாளுக்கு நாள் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் புதுவராவாக ஜீ தமிழ் நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். அதாவது ஜீ தமிழில் பிரபலமாக ஒளிபரப்பான ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ என்ற சீரியலில் முதலில் ஹீரோவாக இருந்தவர் என்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது அல்லியின் மகனாக இன்றைய எபிசோடில் வந்துள்ளார்.