பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த முக்கிய பிரபலம் சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார். தற்போது இவர் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பிரபல தனியார் தொலைக்காட்சியில் பேமஸாக பல எபிசோட்களை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையை மிக சிறப்பாக காட்சிகள் மூலம் வெளிப்படுத்தி வருகிறது. பல பாசப்போராட்டங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் குடும்பங்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த சீரியலில் நடித்த மிக முக்கிய கதாபாத்திரமான முல்லை கடந்த வருடம் இறுதியில் தற்கொலை செய்துகொண்டார். அந்த துயரமே இன்னும் போகாத நிலையில் தற்போது அந்த சீரியலில் நடிக்கும் மற்றொரு பிரபலமும் உயிரிழந்துள்ளார். இந்த சீரியலில் மூர்த்திக்கு மாமாவாக வருபவர் தான் நெல்லை சிவா. இவர் தனது சிரிப்பினால் மக்கள் அனைவரையும் கவர்ந்து வந்தார்.
இவர் சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான நெல்லையில் நடைபெற்றது. தொடர்ந்து அந்த சீரியலின் இரு பிரபலங்கள் உயிரிழந்துள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தற்போது நெல்லை சிவா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தோடு கடைசியாக எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கண்கலங்கி வருகின்றனர்.