முல்லை இடத்தை பிடிச்சுட்டீங்களே காவியா – பாண்டியன் ஸ்டோர்ஸில் அதிகமாகும் ரொமான்ஸ் காட்சிகள்!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல தொடரான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மறைந்த நடிகை சித்ராவிற்கு பதிலாக தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியவினை மக்கள் ஏற்று கொண்டார்களா? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இன்றும் இருந்து வருகின்றது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இதனை மக்கள் தொடர்ச்சியாக பார்த்து வருவதால் அந்த தொடர்களில் நடிக்கும் நடிகர்கள் மிகவும் பிரபலம் அடைந்து விடுவர். இதனாலேயே தொலைக்காட்சி நிறுவனங்கள் நடிகர் நடிகைகள் தேர்வினை கவனமாக செய்வர். அந்த வகையில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான சீரியல் என்றால் அது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தான்.

‘உங்களுக்கு ஒண்ணுன்னா கண்டிப்பா கேட்பேன் மாமா’ – ரொமான்ஸ் சீனில் கலக்கும் கதிர், முல்லை!!

இந்த சீரியல் நாம் பின்பற்றி வந்த எதார்த்தமான கூட்டு குடும்ப கதையினை கொண்டு இயக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்த சீரியலின் சிறப்பம்சமே கூட்டு குடும்பத்தில் இருக்கும் மகிழ்ச்சியினை மட்டும் காட்டாமல் அதில் அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளையும் அழகாய் எடுத்து காட்டியிருப்பர். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடிகையும் தொகுப்பாளருமான சித்ரா நடித்து வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த சீரியலில் கதிர் முல்லை ஜோடி என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால், எதிர்பாராத விதமாக சித்ரா சில காரணங்களால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி திரைத்துறையினருக்கு மட்டுமின்றி ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் வருத்தம் அளித்த செய்தியாக உள்ளது.

இதனை அடுத்து முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்த காவியா ஒப்பந்தமானார். ஆரம்பத்தில் மக்கள் இதனை ஏற்றுக்கொள்ள கஷ்டப்பட்டனர். பின், ஒரு வழியாக காவியாவின் நடிப்பினை பார்த்து மக்கள் அவரை ஏற்றுக்கொண்டனர். அதே போல் தற்போது கதிர் மற்றும் முல்லை இருவருக்கும் நெருக்கமான காட்சிகள் அதிகமாக உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here