தற்போது பரபரப்பாக பேசப்படும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரில் இன்று தனத்தை எந்த சேவையும் தனக்கு செய்ய வேண்டாம் என்று அவரது மாமியார் கோபம் கொள்கிறார். ஆனால், தனத்திற்கு ஆதரவாக கண்ணன் மற்றும் முல்லை பேசுகின்றனர். இவ்வளவு நடந்தும் தனம் அமைதியாக செல்கிறார்.
விறுவிறுப்பான தொடர்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு விறுவிறுப்பான தொடர் தான், பாண்டியன் ஸ்டோர்ஸ். யதார்த்தமான கதைக்களத்துடன், நாம் மறந்து போன பாரம்பரிய கூட்டு குடும்பத்தை நினைவு படுத்தும் வகையில் இந்த தொடர் இருந்ததால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசித்தனர். இத்தனை நாட்களாக தனம் மற்றும் மூர்த்தி இருவரும் தங்களுக்கு குறை இருந்ததால் தான் பிள்ளை பெற்று கொள்ளவில்லை என்று குடும்பத்தினர் நம்பி வந்தனர்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ஆனால், அவர்கள் இருவரும் தம்பிகளுக்காகவும், குடும்பத்திற்காவும் தான் பிள்ளை பெற்று கொள்ளவில்லை என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
இதனால் அவரது மாமியார் தனம் மற்றும் மூர்த்தி இருவரிடமும் கோபமாக உள்ளார். தனது கோபத்தை தனத்தின் மீது காட்டுகிறார். இனி தனக்கு எந்த சேவகமும் செய்ய வேண்டாம் என்று கூறி விடுகிறார். இதனால் அவருக்கு எப்போது என்ன தேவை என்பது மற்றவர்களுக்கு தெரியாமல் திண்டாடுகின்றனர். இதனால் தனம் அவருக்கு தேவையானதை செய்ய முன் வருகிறார்.
பொங்கி எழும் தனம்:
ஆனால், எப்போதும் போல் எரிந்து விழுந்ததும் கண்ணன் மற்றும் முல்லை அதிகமாக கோபப்படுகின்றனர். இவ்வளவு நடந்தும் தனம் அமைதியாக அவ்விடத்தை விட்டு செல்லுகிறார். பின், இரவு யாரும் சாப்பிடாமல் அமைதியாக இருப்பதை பார்த்து கண்ணன் தனது அம்மாவை முன்னறைக்கு அழைத்து வருகிறார்.
எல்லாரும் மூர்த்தியிடம் கேள்விகளை கேட்டு கோபபடுகின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்து கொள்ள முடியாத தனம் அனைவரிடமும் பொங்கி எழுகிறார்.
Instagram => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!
எதற்காக அனைவரும் இப்படி அவரை கேள்வி கேட்கிறீர்கள் என்றும் இனி தன்னை யாரும் மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும் என்று கூற கூடாது என்றும் சொல்கிறார். இதனால் அனைவரும், அப்படி என்றால் மருத்துவமனைக்கு செல்ல மாட்டீர்களா? என்று கேள்வி கேட்கின்றனர்.
இதனை அடுத்து அமைதியாக இருந்து வந்த தனம் இனி அப்படி யாரேனும் சொன்னால் தான் இந்த வீட்டை விட்டு வெளியே சென்று விடுவேன் என்று மிரட்டுகிறார். தனத்தின் இந்த மிரட்டல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இனி அடுத்து நடக்கப்போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.