பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா எடுக்கும் அதிரடி முடிவு – கோபத்தில் ஜனார்த்தனன்!!

0
Pandian-Stores-Serial

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது விறுவிறுப்பான கட்டங்களுடன் போய்க்கொண்டுள்ளது. மூர்த்தி-தனம் தம்பதிகளுக்கு ஏன் குழந்தை பிறக்கவில்லை? என்ற உண்மை அவரின் குடும்பத்திற்கு தெரிய வருகிறது. இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

டாப் ரேடிங்கிளில் போய்க்கொண்டிருக்கும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒன்று. கூட்டுக் குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கதிர்-முல்லை ஜோடியின் ரொமான்ஸ் சீரியலுக்கு மேலும் வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. குடும்பத்தின் மூத்த அண்ணனான மூர்த்தி தன் தம்பிகளுக்காக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று முடிவெடுக்கிறார். இதற்கு தனமும் சம்மதிக்கிறார்.

pandian stores
pandian stores

இதனால் 10 வருடங்களாக இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் பலரும் தனத்தை இழிவாகவும் பேசுகின்றனர். இத்தனை நாட்கள் மறைத்து வைத்த உண்மை அந்த குடும்பத்திற்கு தெரிய வருகிறது. இதனால் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். மூர்த்தியின் அம்மா தனது குடும்பத்திற்காக வாழ்க்கையை தொலைத்து விட்டாலே என்று கோவமடைகிறார். இதனால் தனக்கு எந்த சேவகமும் செய்ய வேண்டாம் என்று கூறி விடுகிறார்.

Pandian-Stores-Serial
Pandian-Stores-Serial

இதனால் மனமுடைந்த தனம் அழுது கொண்டே செல்கிறார். முல்லை எவ்வளவு சமாதானம் செய்தும் மூர்த்தியின் அம்மாவிற்கு கோவம் அடங்கவில்லை. அடுத்ததாக அண்ணியின் இந்த தியாகத்தை நினைத்து தம்பிகள் மூவரும் கவலையில் அமர்ந்துள்ளனர். இதற்கு கைமாறாக என்ன செய்ய போகிறோம் என்று கூறி அழுகின்றனர். ஜீவா, மீனாவிற்கு போன் செய்து அனைத்து விஷயங்களையும் கூற மீனாவும் அதிர்ச்சியடைகிறார்.

pandian stores
pandian stores

மேலும் ஜனார்த்தனனிடம் மீனா சென்று உண்மையை கூற அதனை அவர் கண்டு கொள்வதாக இல்லை. மேலும் மீனாவை அங்கு அனுப்பப் போவதில்லை என்றும் கூறுகிறார். ஜீவாவும் மொத்தமாக இங்கேயே வரப்போகிறார் என்று கூறுகிறார். இதனால் கோவமடையும் மீனா நான் உங்க மகள் கிடையாது!! பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள். அந்த வீட்டில் இருந்து என்னை யாராலும் பிரிக்க முடியாது. மூன்று மாதம் கழித்து அந்த வீட்டிற்கு கண்டிப்பாக போவேன் என்று கூறி கோவமாக செல்கிறார்.

meena
meena

ஜனார்த்தனன் உன்னை எப்படி இங்கு தங்க வைப்பது என்று எனக்கு தெரியும் என்று கூறி செல்கிறார். அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத அளவிற்கு கதைக்களம் போய்க்கொண்டுள்ளது. மீனா குழந்தையுடன் பாண்டியன் ஸ்டோர்ஸில் இணைவாரா?? அல்லது ஜனார்த்தனன் சதி திட்டத்தால் பிரிவாரா?? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here