விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன், தம்பி கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் கதிர், முல்லை ஜோடிக்கே மவுசு அதிகம். தற்போது சென்னைக்கு வந்திருக்கும் முல்லை கதிருக்கு ரொமான்ஸ் சீன் வருமா?? வராதா?? என மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
முல்லை, கதிர் ஜோடி
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 1 மணி நேர தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. ஏனெனில் பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளதால் பல தொடர்களை விஜய் டிவி நிறுத்தியுள்ளது. அதனால் பல விறுவிறுப்புடன் போய்க்கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 1 மணிநேர தொடராக மாறியுள்ளன.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இது வரையில் கண்ணால் மட்டும் பேசி வந்த ஜோடிகளான கதிர், முல்லை தற்போது நேரடியாக ரொமான்ஸில் இறங்கியுள்ளனர். இப்பொழுது கெஸ்ட் ரோலில் மைனா நந்தினி மற்றும் யோகேஷ் நடித்து வருகின்றனர். தனது அண்ணண், அண்ணி விஷயமாக சென்னைக்கு செல்லும் கதிர், முல்லை மைனா நந்தினி வீட்டில் தங்குகின்றனர்.
இவ்வளவு நாள் தனிமைகள் கிடைத்தும் ரொமான்ஸ், டச்சிங் என ஏதும் இல்லாத ஜோடிகளுக்கு தற்போது சென்னைக்கு வந்து ரொமான்ஸ் அதிகமாகி உள்ளது. சென்னை வீட்டில் தனியாக தங்குவதால் முல்லையிடம் கதிர் நெருங்கி வரும் வேளையில் ட்ரான்ஸ்பார்ம் வெடித்து கரண்ட் கட் ஆகிறது.
பல விறுவிறுப்பான கட்டங்களுடன் சித்தி 2 – உண்மையை கண்டறிவாரா கவின்??
இதனால் அப்செட் ஆனாது கதிர் மட்டுமல்ல அதனை பார்க்கும் ரசிகர்களுக்கும் தான். அதன்பிறகு பீச்சில் அமர்ந்திருக்கும் கதிர் முல்லையின் கையை பிடித்து கண்ணாலே பேசிக் கொள்ளும் காட்சி அனைவரும் ரசிக்கும் படியாக இருந்தது.
அடுத்து அவர்கள் தூங்க போகும் வேளையில் கதிர் நெருங்கி வர எதிர்பாராத விதமாக மைனா நந்தினிக்கு யோகேஷ்க்கும் சண்டை வரவே மைனா முல்லையிடம் தூங்குவதற்காக வந்து விடுகிறார். இது அடுத்தகட்ட ஏமாற்றமாக இருந்தது.
அப்போ எப்பொழுது தான் கதிர் முல்லைக்கு ரொமான்ஸ் சீன் வைப்பிங்க அதற்குள் தான் எபிசோட் முடிந்து விட்டதே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இவர்கள் சென்னையில் இருந்து கிளம்புவதற்குள் ரொமான்ஸ் நடக்குமா? நடக்காதா? என்பதை பொறுத்திருந்து பாப்போம்.