விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் தீபிகா விலக இருக்கும் நிலையில் புதிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்ப ஒற்றுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல். இதில் கடைக்குட்டியாக நடித்து வரும் கண்ணனை மையமாக வைத்து தான் தற்போது சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணன் ஐஸ்வர்யா வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டு இப்பொழுது குடும்பத்தை எதிர்த்து வாழ்ந்து வருகின்றனர்.
கண்ணன், ஐஸ்வர்யா கஷ்டப்பட்டு வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது கண்ணன் ஐஸ்வர்யா ஜோடி அதிகளவு புகழை அடைந்து வருகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் தீபிகா இப்பொழுது சீரியலை விட்டு விலகவுள்ளார். இது பலருக்கும் பேரதிர்ச்சி தான். இதுவரையிலும் அவர் விலகுவதற்கான காரணம் வெளியாகவில்லை.
ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் ஈரமான ரோஜாவே சீரியல் அகிலா தான் நடிக்க போகிறார். இந்நிலையில் அடுத்த வாரத்தில் ஒளிபரப்பாகும் எபிசோடுகளில் தான் அகிலா களமிறங்கவுள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் கண்ணன் ஐஸ்வர்யா இணைந்து வீட்டுக்கு முன்னாள் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒருவேளை இதுதான் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படமாக இருக்குமோ?? என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்து வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்