பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. ஜனார்தனின் பல சூழ்ச்சிகளையும் தாண்டி மூர்த்தி குடும்பத்தில் உள்ள அனைவரும் புது வீடு கட்டுவதற்கான வேலைகளை தொடங்கி விட்டனர். ஆனால் அங்கும் வந்த மல்லி, கஸ்தூரி இருவரும் பிரச்சனை செய்கின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்படி சீரியல் ஒளிபரப்பாகி வரும் நேரத்தில் அடுத்து வரும் எபிசோடுகளுக்கான ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் மூர்த்தி பையன் பாண்டியனுக்கு முதல் பிறந்தநாள் வருகிறது. இதை மூர்த்தி, தனம் இருவரும் மறந்த நிலையில் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் ஆடம்பரமாக கொண்டாடுகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனுக்கு இவ்ளோ அழகான அக்காவா? தீயாய் பரவும் குடும்ப புகைப்படம்!!
இதை பார்த்து மூர்த்தி, தனம் சந்தோஷத்தில் மிதக்கின்றனர். இந்த பிறந்தநாள் விழாவில் குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கின்றன. இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது. இதை வைத்து பார்க்கும் போது குடும்பத்தில் உள்ளவர்களின் சந்தோஷத்தை கெடுக்க ஜனார்த்தனன், மல்லி இருவரும் பல சதி வேலைகளை செய்வார்கள் என்று தான் தெரிகிறது.