பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜனார்த்தனன் மூர்த்தி குடும்பத்தை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று அதற்கான சூழ்ச்சிகளை செய்து வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி குடும்பம் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இப்போது கதிர் வீட்டில் தங்கி வருகின்றனர். மீனா இந்த வீட்டில் இருக்க ரொம்ப கஷ்டமாக இருக்கு, மேலும் சின்ன வீடாக இருப்பதால் அனைவரும் தங்குவதற்கு சிரமமாக உள்ளது என தினம் தினம் புலம்புகிறார். இதனால் மூர்த்தி எப்படியாவது புது வீடு கட்டி போக வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கையில் இப்போது புதிய ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது ஏற்கனவே மூர்த்தி மற்றும் அவரது தம்பிகள் பார்த்து வைத்துள்ள இடத்திற்கு அக்ரிமெண்ட் போடுகின்றனர். இதன் பிறகு குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்த இடத்திற்கு சென்று பார்வையிடுகின்றனர். அப்போது மூர்த்தி இந்த இடம் இனி நமக்கு தான் சொந்தம். இங்கிருந்து யாரும் நம்மள வெளியேற்ற முடியாது என சொல்கிறார். இதை கேட்டு மீனா உட்பட குடும்பத்தில் உள்ள அனைவரும் ரொம்ப சந்தோஷம் படுகின்றனர்.
ஆதார் வைத்திருப்போருக்கு இறுதி எச்சரிக்கை.,இனி அபராதம் மட்டுமில்ல,எல்லாம் கட்! அரசு வார்னிங்!!
அந்த நேரத்தில் ஜனார்த்தனன், என்ன செஞ்சாலும் சந்தோஷமாக இருக்குறாங்களே, எப்படியாவது பிரிக்கணும்னு திட்டம் தீட்டுகிறார். இப்படி சீரியல் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதெல்லாம் தெரியாமல் மீனா தனது அப்பாவுக்கு சப்போர்ட் செய்து வருகிறார். ஒருவேளை ஜனார்த்தனன் உண்மை முகம் மீனாவுக்கு தெரியும் வந்தால் அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பார்க்க தான் அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் சீரியலை எதிர்நோக்கியுள்ளனர்.